9 மே, 2010

முல்லை, கிளிநொச்சியில் 17,000 பேர் 31ம் திகதிக்குள் மீள்குடியேற்றம்






வவுனியா நிவாரணக் கிராமங்களில் தங்கியுள்ளவர்களுள் சுமார் 17,000 பேர் எதிர்வரும் 31ஆம் திகதிக்கு முன்னர் கிளிநொச்சி, முல் லைத்தீவு மாவட்டங்களுக்கு மீளக் குடியமர்த்துவதற்காக அழைத்துச் செல்லப்படவுள்ளனர்.

த்துடன் வவுனியா மாவட்டத்திலுள்ள அதியுயர் பாதுகாப்பு வலயமாக கருதப்பட்ட பகுதிகளிலிருந்து படையினர் தமது முகாம்களை அகற்றும் பணியை ஆரம்பித்துள்ளதுடன் முதற்கட்டமாக பேயாடிகூழான்குளம் முகாம் அமைந்த பகுதியில் 65 குடும்பங்கள் மீளக் குடியமர்த்தப்படவுள்ளன. இவர்கள் நாளை திங்கட்கிழமை சொந்த இடங்களை பார்வையிடச் செல்கின்றனர். என வவுனியா அரச அதிபர் திருமதி பீ. எம். எஸ். சார்ள்ஸ் தெரிவித்தார்.

அரச அதிபர் பீ. எம். எஸ். சார்ள்ஸ் பாதுகாப்பு பிரிவினருடன் நடத்திய பேச்சுகளின் பயனாக வவுனியா பூவரசன் குளம் விமானப் படை முகாம் அகற்றப்படுவதற்கான நடவடிக்கைகளை படையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியா மாவட்டத்தில் தனியார் மற்றும் அரச காணிகள், கட்டடங்களை விட்டு வெளியேற ஆரம்பித்துள்ளனர் என அரச அதிபர் தெரிவித்தார்.

வவுனியா மாவட்டத்தின் சகல பிரிவுகளுக்கும் பொறுப்பான படைய திகாரிகள் பிரதேச செயலாளர்கள், திணைக்கள தலைவர்கள், அரச சார்பற்ற நிறுவனப் பிரதிநிதிகளுடன் நேற்று மீள்குடியேற்றம் தொடர்பான விசேட கூட்டமொன்றை வவுனியா அரச அதிபர் அலுவலகத்தில் நடத்தினர்.

இந்தக் கூட்டத்தில் நாளை திங்கட்கிழமை பாலமோட்டை சேமமடு பகுதியில் 500 குடும்பங்களை மீளக் குடியமர்த்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது.

வவுனியா வடக்கு பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட சகல கிராமசேவகர் பிரிவுகளிலும் 6333 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 21,400 பேர் மீளக்குடியமர்த்தப் பட்டுள்ளனர் என்றும் கூட்டத்தில் பேசப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும் வவுனியா மாவட்டத்திலுள்ள பெரிய தம்பாணை, பரயனாளன்குளம், பிரமனாளன்குளம், கணேசபுரம், கோதண்டநொச்சி குளம், பீமன் கல்லு பகுதிகளிலும் 500 குடும்பங்கள் மீளக் குடியமர்த்தப்படவுள்ளதாக அரச அதிபர் திருமதி பீ. எம். எஸ். சார்ள்ஸ் தெரி வித்தார்.

பிறப்பன்மடு பகுதியில் 25 குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகள் கட்டப்பட்டு ஒப்படைக்கப்பட்டுள்ளன. ரத்கத்கேகம பகுதிக்கும் பிறப்பன்மடு பகுதிக்கும் மின்சாரம் முழுமையாக வழங்கப் பட்டுள்ளதாகவும் அரச அதிபர் திருமதி பீ. எம். எஸ். சார்ள்ஸ் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக