9 மே, 2010

மன்னார் நகரப்பகுதிகளில் விசேட பாதுகாப்பு



மன்னார் பகுதிகளில் அண்மைக்காலமாக இடம்பெற்று வரும் கொள்ளைச் சம்பவங்களைத் தொடர்ந்து மன்னார் நகரப்பகுதிகளில் இரவு நேரங்களில் பொலிஸார் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுப்பட்டுள்ளனர்.

இரவு நேரங்களில் சந்தேகத்திற்கிடமான முறையில் காரணம் எதுவும் இன்றி நடமாடுபவர்களை கைது செய்யுமாறு பொலிசாருக்கு அறிவிக்கப்ட்டுள்ளது. இந்நிலையில் மன்னார் பகுதிகளில் நேற்று இரவு 11.30 மணியளவில் எவ்வித காரணமும் இன்றி நடமாடிய 02 இளைஞர்களை பொலிசார் கைது செய்துள்ளனர்.

இவர்கள் தற்போது தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக மன்னார் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக