18 மே, 2010

ஆயிரம் இளைஞர் யாழ். நகரில் இன்று பெற்றோரிடம் ஒப்படைப்பு






புனர்வாழ்வு நிலையங்களில் வசிக்கும் ஆயிரம் இளைஞர் யுவதிகள் இன்று 18ம் திகதி செவ்வாய்க்கிழமை பெற்றோரிடம் கையளிக்கப்படவுள்ளனர்.

யுத்தம் நிறைவுக்கு வந்த ஓராண்டினை முன்னிட்டு யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டு மைதானத்தில் வட மாகாண ஆளுநர் தலைமையில் இந்த வைபவம் நடைபெறவுள்ளது.

இந்த வைபவத்தில் கலந்துகொள்ளு மாறு வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார் மாவட்ட அரச அதிபர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

வவுனியாவிலுள்ள புனர்வாழ்வு நிலையங்களில் அனேகர் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக