18 மே, 2010

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் தொடர்ந்து தடுத்துவைக்கப்படுவர்- டி.எம்.ஜயரட்ன

அவசரகால சட்டத்தின் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட பயங்கரவாதத்துடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்க படும் சந்தேக நபர்களை விடுதலை செய்யாது தொடர்ந்து தடுத்துவைக்கப்படுவர் என பிரதமர் டி.எம்.ஜயரட்ன தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் 1,900 பேர் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்னர். இந்நிலையில் தற்போது அவசரகாலச் சட்டத்தில் சில விதிமுறைகள் நீக்கப்பட்டுள்ள போதும் நாட்டின் பாதுகாப்பு கருதி இவர்கள் அனைவரும் தொடர்ந்து தடுத்து வைக்கப்படுவர் என தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக