18 மே, 2010

ஜீ-15 நாடுகளின் தலைவராக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ




ஜீ-15 நாடுகளின் தலைவராக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளார்.
ஈரானியத் தலைநகர் தெஹ்ரானில் நடைபெறும் ஜீ-15 நாடுகளின் 14வது உச்சி மாநாட்டிலேயே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு இத்தலைமைப் பதவி வழங்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க ஜீ-15 நாடுகளின் 15வது மாநாடு இலங்கையில் நடைபெறவுள்ளது.

தலைமைப் பொறுப்பைக் கையேற்று உரை நிகழ்த்திய ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷ; ஜீ- 15 நாடுகளின் குரல் சர்வதேச ரீதியில் பலமாக ஒலிப்பதற்குத் தாம் வழிவகை செய்வதாக உறுதியளித்துள்ளார். இச்செயற்பாடுகளின் மூலம் இலங்கைக்கு அங்கத்துவ நாடுகளின் பூரண ஒத்துழைப்புக் கிட்டுமெனவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஜீ-15 மாநாட்டின் நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு உயர் சம்பிரதாயங்களை கட்டிக்காத்த முன்னாள் தலைவரான ஈரானிய ஜனாதிபதி மஹ்மூத் அஹமதி நெஜாத்திற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமது பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக