18 மே, 2010

கடந்த காலங்களில்

கடந்த காலங்களில் இனப்பிரச்சினையின் தீர்வுக்காகச் சாத்வீக வழியிலும் ஆயுதப் போராட்டமாகவும் மேற் கொள்ளப்பட்ட முயற்சிகள் பயனளிக்காத நிலையில், பிரச் சினையின் தீர்வுக்கு வழியே இல்லையா என்ற கேள்வி எழலாம். இரண்டு முயற்சிகளினதும் தோல்விக்கான காரண த்தை விளங்கிக்கொண்டால் தீர்வுக்கான வழி தெரியும்.

நடைமுறைச் சாத்தியமற்ற கோரிக்கையை வலியுறுத்தியதும் யதார்த்தத்துக்கு முரணான அணுகுமுறையைப் பின்பற்றியதும் தோல்விக்கான பிரதான காரணங்கள்.

இனப்பிரச்சினை ஆறு தசாப்தங்களுக்கு மேல் பழமை வாய்ந்தது. இக்காலப்பகுதியில் இடம்பெற்ற பல நிகழ்வுகள் இனங்களுக் கிடையிலான உறவை வெகுவாகச் சீரழித்துவிட்டன. இதனால் பரஸ்பர சந்தேகம் வளர்ந்திருக்கின்றது.

நிலையில், முழு மையான தீர்வைத் தவிர வேறெதையும் ஏற்க முடியாது என்ற நிலைப்பாடு யதார்த்தத்துக்கு முரணானது. இந்த நிலைப்பாடு பயனளிக்காதென்பது மாத்திரமன்றி, தீர்வு முயற்சியை வெகுவாகப் பின்தள்ளக்கூடியது என்பதையும் அனுபவத்தில் பார்த்துவிட்டோம்.

தனிநாடு நடைமுறைச் சாத்தியறமற்றது. சாத்வீக வழியிலோ ஆயு தப் போராட்டத்தின் மூலமோ அடைய முடியாதது. தனிநாட் டுக்காக நடத்தப்பட்ட ஆயுதப் போராட்டம் எவ்வளவு அழிவு கரமானது என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. இந்த ஆயுதப் போராட்டம் ஆரம்பித்ததற்குப் பின்னரே தமிழ் மக்கள் தங்கள் வாழ்புலங்களிலிருந்து வெளியேறும் நிலை ஏற்பட்டது.

ஆயிரக்கணக்கான இளைஞர்களை இப்போராட் டம் அநியாயமாகப் பலிகொடுத்தது. பல்லாயிரக்கணக்கான தமிழ்ப் பொதுமக்களின் மரணத்துக்கு இதுவே காரணம். பெருவாரியான தமிழ் மக்கள் அகதி முகாம்களில் தஞ்சமடையும் நிலையைத் தோற்றுவித்ததும் இப்போராட்டமே.

இந்த அவலங்களைத்தான் ஆயுதப் போராட்டம் தமிழ் மக்க ளுக்குத் தந்தது. எந்தவொரு நன்மையையும் தரவில்லை. அரசியல் தீர்வு முயற்சிகள் அனைத்தையும் அச்சுறுத்தல் மூலம் திசை திருப்பினார்கள்.

இன்று அவர்கள் உள்ளூர் அரசியல் அரங்கிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டு, ஆக்கபூர்வ மான முறையில் அரசியல் தீர்வு முயற்சியை முன்னெடுப் பதற்குச் சாதகமான சூழ்நிலை நிலவுகின்ற நேரத்தில் பிரிவினைவாதிகளிடமிருந்து நாடுகடந்த அரசாங்கம் என்ற குரல் ஒலிக்கின்றது. இது முப்பது வருடங்கள் முயன்று தோற்றுப் போன தனிநாட்டு முயற்சியின் இன்னொரு வடிவம்.

முப்பது வருடங்களாகத் தமிழ் மக்கள் அனுபவித்த துன்பங்களுக்கும் அவலங்களுக்கும் இன்று நாடுகடந்த அரசாங்கம் பற்றிப் பேசுபவர்களும் பொறுப்பாளிகள். புலிக ளுக்கு இவர்கள் வழங்கிய நிதி இலங்கையில் தமிழ் மக்க ளுக்குப் பாதகமான முறையில் பயன்பட்டிருக்கின்றது.

ஒரு நாட்டில் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் அப் போராட்டத்தை அந்நாட்டில் தொடர முடியாத நிலையில் வேறொரு நாட்டுக்குச் சென்று கரந்துறை அரசொன்றை அமைத்துத் தங்கள் போராட்டத்தைத் தொடர்வதே இதுவரை உலகம் அறிந்த நாடுகடந்த அரசாங்கம்.

இலங்கையில் ஆயு தப் போராட்டம் நடத்திய பிரிவினைவாதிகள் யுத்த களத்தில் தோற்கடிக்கப்பட்டு விட்டார்கள். இன்று நாடுகடந்த அரசாங்கம் பற்றிப் பேசுபவர்கள் வெகு காலத்துக்கு முன் இலங்கை யிலிருந்து புலம்பெயர்ந்து பல்வேறு உலக நாடுகளில் தங்கள் வாழ்க்கையை நிரந்தரமாக அமைத்துக்கொண்டவர்கள். இவர் கள் எந்தக் காலத்திலும் இலங்கைக்குத் திரும்பி வரப் போவதில்லை.

நாடுகடந்த அரசாங்கம் அமைக்கும் முயற்சி இலங்கை வாழ் தமிழ் மக்களுக்கு எவ்விதத்திலும் பலன் தரப்போவதில்லை. இது இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் முயற்சியைத் திசை திருப்புவதற்கான ஒரு ஏற்பாடு.

தீர்வு முயற்சிகளைப் புலிகள் திசை திருப்பியதால் ஏற்பட்ட அவலங்களிலும் பின்னடைவு களிலுமிருந்து விடுபட்டுத் தமிழ் மக்கள் நிம்மதிப் பெருமூச்சு விடுகின்ற நேரத்தில், வெளிநாடுகளில் சுகபோக வாழ்க்கை நடத்தும் புலி ஆதரவாளர்கள் மீண்டும் திசை திருப்பல் முயற்சியில் இறங்கியிருக்கின்றார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக