18 மே, 2010

பொருளாதார அபிவிருத்திக்காக கிராம மக்கள் நகரப் பிரதேசங்களுக்கு நகரவேண்டியதில்லை -ஜனாதிபதி



புதிய தொழில்களை உருவாக்குதல், வறுமையை ஒழித்தல், பொருளாதார அநுகூலங்கள் பகிரப்படுவதில் நியாயத்தை உறுதிப்படுத்தல், நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் அபிவிருத்தியை ஏற்படுத்தல் போன்றன மஹிந்த சிந்தனையில் இடம்பெற்றுள்ளன என்பதுடன், பொருளாதார அபிவிருத்திக்காக கிராம மக்கள் நகரப் பிரதேசங்களை நோக்கி நகரவேண்டியதில்லை. அந்தக் கொள்கையின் காரணமாக, தேர்தல்களில் பெரும்பான்மையானோர் எம்மை ஆதரித்தனர் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். உலக நிதி மற்றும் பொருளாதாரப் பிரச்சினைகளை எதிர்கொள்ளவும், பொருளதார நெருக்கடிகளைத் தவிர்க்கவும், முடியுமான வரையில் சர்வதேச நிதி இயல்பை மறுசீரமைப்புச் செய்யவேண்டும் என்பதே எமது அவதானமாகும். இந்த நோக்கத்தை அடைவதற்காக திறந்த விரிவான மற்றும் வெளிப்படைத்தன்மை மிக்க கலந்துரையாடல்கள் அவசியமாகும் ஜி15 நாடுகள், ஜி8 நாடுகளுடன் நெருக்கமாக செயற்படவேண்டும் என்ற யோசனையையும் முன்வைக்கின்றேன் என்றும் அவர் சொன்னார்.

ஈரானில் நேற்று நடைபெற்ற ஜி15 நாடுகளின் உச்சிமாநாட்டில் கலந்துகொண்டு அங்கு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

ஜி15 நாடுகளின் தலைமைப் பதவி இம்முறை இலங்கைக்குக் கிடைக்கின்றமை எமக்குக் கிடைத்த வரப்பிரசாதமும், கௌரவமுமாகும். கடந்த 20 வருடங்களில் எமது குழுவினால் கூட்டுப் பொருளாதார செயற்பாட்டை மேற்கொள்ள முடிந்துள்ளது. ஆரம்பத்தில் ஜி8 குழுவுடன் ஒப்பிடுகையில் சற்று பின்தங்கிய நிலையில் இருந்த எங்களில் இன்று சில நாடுகள் வளர்ச்சி கண்டு, உலகப் பொருளாதாரத்தில் முக்கிய பங்களிப்பை வழங்குகின்றன. மஹிந்த சிந்தனை வேலைத்திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு மக்களை நோக்கமாகக் கொண்டே எமது அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் அமைந்துள்ளன. புதிய தொழில்களை உருவாக்குதல், வறுமையை ஒழித்தல், பொருளாதார அனுகூலங்கள் பகிரப்படுவதில் நியாயத்தை உறுதிப்படுத்தல், நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் அபிவிருத்தியை ஏற்படுத்தல் போன்றன இடம்பெற்றுள்ளன. எமது நாட்டின் ஜனநாயக நல்லாட்சி மற்றும் கலாசார அங்கங்களைப் பேணிய வண்ணமே இவற்றை மேற்கொள்கின்றோம்.

எமது நாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயம் யாதெனில், பொருளாதார அபிவிருத்திக்காக கிராமப்புற மக்கள் நகரப் பிரதேசங்களுக்கு நகரவேண்டியதில்லை என்பதாகும். இருப்பிடம், நீர், சுகாதாரம் போன்ற விடயங்களில் நெருக்கடியை ஏற்படுத்தும் வகையில் கிராமப்புற மக்கள் நகரப் பகுதிகளை நோக்கி நகர்வதற்குப் பதிலாக, கிராப் புறங்களுக்கு அனைத்து வசதிகளையும் செய்துகொடுக்க வேண்டும் என்பதே எனது அரசாங்கத்தின் நோக்கமாகும். இதன் காரணமக்ஷிக, அண்மையில் நடந்த தேர்தலில் எனது அரசாங்கத்திற்கு கிராமப்புறங்களில் அதிகளவில் வாக்குகள் கிடைத்தன. வறுமையைக் குறைப்பதற்கு உதவும் வகையிலான முதலீடுகளை உறுதிப்படுத்தும் நோக்கில் இலங்கை மத்திய வங்கியின் நிதிக்கொள்கையில் திருத்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளமையையும் நான் இங்கு குறிப்பிடுகின்றேன். அதேபோன்று, அரச வங்கிகள் ஊடாக கிராமப்புறங்களுக்கு அதிகளவில் நிதி வசதிகளை அளிக்கவும், அதனூடாக வங்கிகளுக்கு இடையில் போட்டித்தன்மையை ஏற்படுத்தி, கிராமிய மக்கள் பயன்பெறும் வகையில் செயற்பட்டுள்ளோம். வாஷிங்டன் இணக்கப்பாட்டின் பாதக விளைவுகள் குறித்தும், இந்த நாடுகளின் அபிவிருத்திக்கு உதவும் அமைப்புக்கள் தொடர்பிலும் அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகள் குரல் எழுப்பினாலும், அதில் பயன் கிடைக்கவில்லை. எனினும், தற்போது விதிகளைத் தளர்த்தல் போன்ற மேற்குலக பொருளாதாரத்திலும் சிறப்பான கொள்கை மாற்றங்களை காணமுடிகின்றது.

எமது நாடுகளின் மனித வளத்தின் முக்கியத்துவம் தொடர்பில் ஜி15 நாடுகள் கவனம் செலுத்தவேண்டும். அபிவிருத்தியின் அனைத்துக் கட்டங்களிலும் நிர்மாண ரீதியான விடயங்களை உருவாக்க ஜி15 நாடுகள், ஜி8 நாடுகளுடன் நெருக்கமாக செயற்பட வேண்டும் என்று யோசனையை முன்வைக்கின்றேன். ஜி15 நாடுகள் மற்றும் ஜி8 நாடுகளுக்கு இடையிலக்ஷின விடயங்ளை யதார்த்தமாக்குவதற்கு தெளிவான பேச்சு முறைமை ஒன்று கட்டியெழுப்பப்பட வேண்டும். பொருளாதார நிதி, விஞ்ஞான மற்றும் கலாசாரம் போன்ற அனைத்து விடங்களிலும் நெருங்கிய உறவுகளைப் பேணுவதற்காக எமது அரச நிறுவனங்கள் மற்றும் தனியார் துறையின் அனுபம் மிக்க உறுப்பினர்களைக் கொண்ட செயலணி ஒன்றை உருவாக்கவேண்டும் என்று யோசனையை முன்வைக்கின்றேன் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக