11 ஏப்ரல், 2010

தேர்தலில் வாக்கெண்ணும் நடைமுறையில் திருப்தி




பொதுத் தேர்தல் முடிவுகளில் பூரண திருப்தியடைவதாக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரம சிங்க தெரிவித்துள்ளார்.

நடந்து முடிந்த தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பெரும்பான் மையைப் பெற்று வெற்றியடைந்துள்ள தாகவும் வாக்குகளை எண்ணும் நடைமுறை திருப்தி கரமாக மேற்கொள்ளப்பட்டதாகவும் ரணில் விக்கிரம சிங்க தெரிவித்துள்ளார்.

தேர்தல் முடிவுகளை ஏற்றுக் கொள்வதா, இல் லையா என்பதைப் பற்றி ஆலோசித்து முடிவு எடுப்ப தாக கட்சியைச் சேர்ந்த சிலர் கருத்துத் தெரிவித்தி ருந்தனர். இந்நிலையிலேயே பொதுத் தேர்தல் முடிவு கள் பூரண திருப்தியைத் தருவதாக ரணில் விக்கிரம சிங்க கருத்துத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை கட்சியை மறுசீரமைக்க வேண்டியது இன்றியமையாதது என்பதை தேர்தல் முடிவுகள் தெளிவாக உணர்த்தியுள்ளதாக ஐ.தே.க.வின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். அதற்காக அவசியமும் அவரசமும் கட்சி முக்கியஸ்தர் களால் உணரப்பட்டுள்ளதாகவும் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக