11 ஏப்ரல், 2010

திருமலை - கண்டி மாவட்ட மீள் வாக்கெடுப்பு 20இல்




திருகோணமலை மற்றும் கண்டி வாக்கெடுப்பு நிலையங்களில் ரத்து செய்யப்பட்ட வாக்கெடுப்பு, எதிர்வரும் 20ஆம் திகதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வன்முறைகள் மற்றும் சட்ட மீறல்கள் இடம்பெற்றதாகக் கூறப்பட்டு திருகோணமலை மாவட்டத்தின் கும்புறுபிட்டிய மற்றும், கண்டி மாவட்ட நாவலப்பிட்டியின் 34 வாக்கெடுப்பு நிலையங்களின் வாக்குகள் ரத்து செய்யப்பட்டன.

இந்த நிலையில் அந்த வாக்கெடுப்ப நிலையங்களில் மீண்டும் வாக்குப் பதிவுகள் மேற்கொள்வதற்குத் தீர்மானிக்கப்பட்டது. இதன்படி எதிர்வரும் 20ஆம் திகதி நடத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான வர்த்தமானி அறிவித்தல் இன்று வெளியிடப்படும் எனத் தேர்தல்கள் செயலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும் நாவலபிட்டி மற்றும் கும்புறுபிட்டிய தேர்தல் வாக்கு நிலையங்களின் முடிவுகள் அறிவிக்கப்படாமல், புதிய நாடாளுமன்றத்தைக் கூட்ட முடியாது. எனவே எதிர்வரும் 20ஆம் திகதி மீண்டும் தேர்தல் நடத்தி, முழுமையான பெறுபேறுகள் அறிவிக்கப்பட்டதன் பின்னர் புதிய நாடாளுமன்றம் கூட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக