11 ஏப்ரல், 2010

பேசாலையில் நேற்று மாலை ஐமசுகூ - ததேகூ மோதல்




மன்னார் பேசாலைப் பகுதியில் நேற்று மாலை 4.30 மணியளவில் இரு கட்சிகளின் ஆதரவாளர்களுக்கிடையே கடுமையான மோதல் சம்பவம் இடம்பெற்றதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஆதரவாளர்களுக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஆதரவாளர்களுக்கும் இடையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தின்போது லக்ஷ்மன் (வயது 24) என்பவர் கடுமையான காயங்களுக்கு உள்ளாகி மன்னர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன் பேசாலை கிராம அலுவலகர் ஆளும் கட்சி ஆதரவாளர்களால் தாக்கப்பட்டுள்ளதாகவும் செய்தியாளர் குறிப்பிடுகிறார்.

தற்போது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனும் சம்பவ இடத்துக்கு வந்திருந்ததாகவும் அவர் மேலும் தெரிவிக்கிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக