3 ஏப்ரல், 2010

கபொத(சா/த) பெறுபேறுகள் தேர்தலின் பின் வெளிவரும் : திணைக்களம் தகவல்

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சையின் பெறுபேறுகள் நாடாளுமன்ற தேர்தல் வாக்களிப்புக்குப் பின் வெளியிடப்படும். இதற்கான நடவடிக்கைகளை பரீட்சைகள் திணைக்களம் மேற்கொண்டு வருகின்றது.

பெறுபேறுகள் எதிர்வரும் 9 ஆம் திகதி அல்லது 10 ஆம் திகதி வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் பெறுபேறுகள் தபாலிடப்பட்டதன் பின்னரே இணையத்தளத்தில் பதிவிறக்கம் செய்யபடும் என்றும் பெறுபேறுகளை கணினிமயப்படுத்தும் நடவடிக்கைகள் நிறைவடையும் தறுவாயில் இருக்கின்றன என்றும் திணைக்களம் அறிவித்துள்ளது.

சாதாரண தரப் பரீட்சையில் புதிய பாடத்திட்டத்தின் பிரகாரம் 3 லட்சம் பேரும் பழைய பாடத் திட்டத்தின் பிரகாரம் மாணவர்கள் மற்றும் தனியார் பரீட்சார்த்திகள் அடங்கலாக இரண்டரை லட்சம் பேரும் பரீட்சைக்குத் தோற்றியிருந்தனர்.

பரீட்சை பெறுபேறுகள் வெளியானதன் பின்னர் மீள் திருத்தத்திற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் ஏப்ரல் 30 ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்க முடியும் என்றும் திணைக்களம் தெரிவித்துள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக