3 ஏப்ரல், 2010

அமைச்சர் பதியுதீனின் அலுவலகம்மீது தாக்குதல் : மன்னாரில் பதற்ற நிலை



மன்னார் உப்புக்குளம் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த அமைச்சர் றிஷாட் பதியுதீனின் அலுவலகம் நேற்று மாலை 6.45 மணியளவில் நூர்தீன் மசூரின் ஆதரவாளர்களால் உடைக்கப்பட்டுள்ளது. இதனால் நேற்று மன்னார் உப்புக்குளம் பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து நேற்றிரவு மன்னாரில் அச்ச நிலை தோன்றியிருந்தது. உப்புக்குளம் பகுதியில் நூற்றுக்கணக்கான பொலிஸார் குவிக்கப்பட்டனர். அப்பகுதியில் றிஷாட் பதியுதீனின் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற போது, பொலிசார் அவர்களைக் களைந்து போகுமாறு பணித்தனர்.

அச்சமயம் சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட நீதிபதி ஏ.யூட்சன், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை உடன் கைது செய்யுமாறு உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிடும் நூர்தீனின் ஆதரவாளர்கள் மன்னார் தாராபுரம் பகுதியில் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்ட போது, அவர்களின் வாகனங்களும் கடுமையாகத் தாக்கப்பட்டதையடுத்தே அவர்கள் கைது செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக