3 ஏப்ரல், 2010

அல்-குவைதாவுக்கு ஆதரவு:டாக்சி டிரைவர் சிக்கினார்





சிகாகோ:அமெரிக்காவில் கைதான, பாகிஸ்தான் வம்சாவளி டாக்சி டிரைவர் மீது அல்-குவைதா அமைப்புக்கு ஆதரவு மற்றும் நிதியுதவி அளித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.அமெரிக்காவின் சிகாகோ நகரில், ராஜா லாராசிப் கான் என்ற டாக்சி டிரைவரை கடந்த வாரம், அந்நாட்டின் புலனாய்வு நிறுவனத்தினர் கைது செய்தனர்.பாக்., வம்சாவளியைச் சேர்ந்த இந்த டிரைவர், ஹூஜி பயங்கரவாத அமைப்பின் தலைவர் இலியாஸ் காஷ்மீரிக்கு நெருக்கமானவர் என, விசாரணையில் தெரிந்தது.'சர்வதேச பயங்கரவாதி ஒசாமா பின்லாடன், நல்ல உடல் நலத்துடன் உள்ளார். தனக்கு கீழ் உள்ளவர்களுக்கு போதிய உத்தரவுகளைப் பிறப்பித்து வருகிறார்' என, விசாரணையில் லாராசிப் கான் கூறினான்.

இந்நிலையில், அல்-குவைதா பயங்கரவாத அமைப்புக்கு தார்மீக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் லாராசிப் கான் உதவி அளித்ததாக, அவன் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.வரும் 7ம் தேதி சிகாகோ கோர்ட்டில் நடக்கும் இந்த வழக்கின் ஆரம்ப கட்ட விசாரணைக்கு லாராசிப் கான் ஆஜர்படுத்தப்படுகிறான். அப்போது அவனுக்கு எதிராக பல ஆதாரங்களை அரசு தரப்பினர் சமர்ப்பிப்பர் என, எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக