3 ஏப்ரல், 2010

ஈரானை வழிக்கு கொண்டுவர சீனாவுடன் ஒபாமா ஆலோசனை







'ஈரான் தொடர்பான, அணுசக்தி தயாரிப்பு விஷயத்தில் ஈரான் மேற்கொள்ளும் சாதகமற்ற போக்கு குறித்து, அமெரிக்க அதிபர் ஒபாமா நேற்று அவசரமாக சீன அதிபர் ஹூ ஜிண்டாவோவிடம் தொலைபேசியில் பேசினார்.ஈரானின் அணுசக்தி திட்டத்தில், அணு ஆயுத தயாரிப்பு இருக்கிறது என்று கூறி, அதன் மீது அமெரிக்கா பொருளாதார தடைகள் கொண்டு வரும் என்ற கருத்து எழுந்த நிலையில், இப்பிரச்னை குறித்து பேசுவதற்காக இத்துறையில் பொறுப்பு வகிக்கும் ஈரானின் சயீது ஜலீலி, பீஜிங்கில் பேச்சுவார்த்தை நடத்த சென்றுள்ளார்.

இந்நிலையில், அமெரிக்க அதிபர் ஒபாமா நேற்றுமுன்தினம் இரவு அவர், போன் மூலம் சீன அதிபரிடம் பேசினார்.அப்போது, இம்மாத இறுதியில் நடைபெற உள்ள அணுஆயுத பாதுகாப்பு மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு, சீன அதிபருக்கு அழைப்பு விடுத்த ஒபாமா,'அணுஆயுத பரவலை தடுப்பது மற்றும், அணுஆயுத பயங்கரவாதத்திலிருந்து பாதுகாப்பது குறித்து, உங்கள் கருத்தை தெரிவிக்க நல்ல வாய்ப்பு' என்றார்.

இதுகுறித்து, வெள்ளை மாளிகையில் இருந்து வெளியிடப்பட்ட அறிக்கை:அமெரிக்க அதிபர் ஒபாமா நேற்று முன்தினம் இரவு, சீன அதிபர் ஹூ ஜிண்டாவோவிடம் பேசினார். அப்போது இரண்டு பேரும், ஈரான், ஜி-20 மற்றும் நடைபெற உள்ள அணுசக்தி பாதுகாப்பு மாநாடு ஆகியவை குறித்து விவாதித்தனர்.மேலும், இருநாடுகளுக்கு இடையிலான நல்லுறவுகள் வளர்ச்சியடைவதன், முக்கியத்துவம் குறித்தும் அவர்கள் விவாதித்தனர்.இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.இதுகுறித்து, பொது விவகாரங்கள் துறை துணை அமைச்சர் பி.ஜே.கிரவுளி கூறுகையில்,' கடந்த காலங்களில், ஈரான் தொடர்பான ஒவ்வொரு தடைகளிலும், சீனா ஆதரவு தெரிவித்துள்ளது. ஈரானின் அணுசக்தி திட்டம் தொடர்பான பிரச்னைக்கு அரசியல் ரீதியாக தீர்வு காண வேண்டும் என, சீனா தெரிவித்துள்ளது. தற்போது எந்த தீர்வுக்கும், அடிபணிய மறுக்கும் ஈரான் மீது, நாங்கள் எடுக்கும் நடவடிக்கை, சரியானது என்பதை சீனா உணர்ந்திருக்கும்' என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக