3 ஏப்ரல், 2010

பொலித்தீன் கொடிகள் 17,000 கிலோ, கட்அவுட் 3600 நேற்றுவரை அகற்றல் 4ம், 5ம் திகதிகளில் பொலிஸ் நடவடிக்கை தீவிரமாகும்


தேர்தல் தினம் அறிவிக்கப்பட்ட நாள்முதல் வேட்பாளர்கள், ஆதரவாளர்களினால் போடப்பட்ட வர்ண பொலித்தீன் கொடிகள் இன்றுவரை சுமார் 16,754 கிலோ மற்றும் 3603 கட்அவுட்டுகள், 824 பெனர்கள் பெருந்தொகையான போஸ்டர்கள் அகற்றப்பட்டுள்ளதாக தேர்தல்களுக்கான பிரதிப் பொலிஸ் மா அதிபர் காமினி நவரட்ன தெரிவித்தார்.

தேர்தல் ஆணையாளரின் பணிப்புரைக்கு அமைய பொலிஸ் மா அதிபரின் உத்தரவின் கீழ் நாட்டிலுள்ள 413 பொலிஸ் பிரிவுகளிலும் தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக வேட்பாளர்கள், ஆதரவாளர்களால் போடப்படும் வர்ண பொலித்தீன் கொடிகள், பெனர்கள் கட்அவுட்கள் போஸ்டர்கள் அகற்றும் வேலைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பொலிஸார் இவற்றை அகற்றிக் கொண்டு செல்லும் போது வேட்பாளர்கள், ஆதரவாளர்கள் மீண்டும் அதே போன்ற போஸ்டர்களையும், பெனர்களையும், கட்அவுட்டுகளையும் வைக்கின்றனர்.

தற்போது நடைமுறையிலுள்ள தேர்தல் முறையில் இவை தவிர்க்க முடியாததாகிவிட்டது என்றும் அவர் தெரிவித்தார்.

எனினும், நாளை 4ஆம் திகதி நள்ளிரவு முதல் 5ஆம் திகதி நள்ளிரவு வரையில் கட்டவுட், பெனர், போஸ்டர்களை அகற்றும் நடவடிக்கையை மிக கடுமையாக பொலிஸார் கடைப்பிடிப்பார்கள் என்பதுடன் ரோந்து சேவையின் போது பொலிஸார் கண்காணிப்பு நடவடிக் கைகளையும் மேற்கொள்வார்கள் என்றும் தெரிவித்தார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக