3 ஏப்ரல், 2010

5 மாவட்டங்களில் இடம்பெயர்ந்த 45, 692 பேர் வாக்களிக்கத் தகுதி


எதிர்வரும் 8ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிப்பதற்காக நாட்டின் 5 மாவட்டங்களைச் சேர்ந்த 45,692 இடம்பெயர்ந்த வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளதாகத் தேர்தல் செயலகம் அறிவித்துள்ளது.

யாழ்ப்பாணம், வன்னி, மட்டக்களப்பு, திருகோணமலை, திகாமடுல்ல ஆகிய ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த வாக்காளர்களே இதற்காக விண்ணப்பித்துள்ளனர்.

நாடாளுமன்றத் தேர்தலில் இடம்பெயர்ந்த மக்கள் வாக்களிப்பதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும்படி கோரப்பட்டிருந்தது.

இதன் பிரகாரம், விண்ணப்பித்த இடம்பெயர்ந்த மக்கள், வாக்களிப்பதற்காக விசேட வசதிகளைச் செய்து கொடுப்பதற்குத் தேர்தல் செயலகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இடம்பெயர்ந்துள்ள வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு வசதியாக சுமார் 96 விசேட வாக்களிப்பு நிலையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையாளர் தயானந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக