28 ஏப்ரல், 2010

கிழக்கு மாகாண முதலமைச்சர் அடுத்த மாதம் இந்தியா விஜயம்



கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் அடுத்த மாதம் இந்தியா செல்லவுள்ளதாக கட்சியின் ஊடகப் பேச்சாளர் அசாத் மௌலானா தெரிவித்தார்.

சந்திரகாந்தன் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் குழு ஒன்று, இந்தியாவுக்கான விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாகவும், அடுத்த மாதம் இக்குழுவினர் செல்லவிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த விஜயத்தின் போது, இந்திய அரசாங்கத்தின் பல்வேறு உயர் மட்ட பிரதிநிதிகளை முதலமைச்சர் சந்திக்கவிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தற்போது கட்சியின், கொள்கைகள் மற்றும் எதிர்கால முன்னெடுப்புகள் குறித்து, இந்திய அரசாங்கத்துடன் கலந்துரையாடி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

அண்மையில் இந்திய வெளியுறவுச் செயலாளர் நிரூபமா ராவ் இலங்கை வந்திருந்த வேளை, சந்திரகாந்தனை சந்தித்த போது விடுத்த அழைப்பின் அடிப்படையில் அமையவுள்ளதாகவும் அசாத் மௌலானா குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக