28 ஏப்ரல், 2010

மன்னாரில் அதிகரித்துவரும் சமூக சீர்கேடுகள்

மன்னார் – தலைமன்னார் பிரதான வீதியின் 2ஆம் கட்டை பகுதியில் இளைஞர் படையணிக்காக கட்டப்பட்ட கட்டட வளாகத்தினுள் சமூக சீர்கேடுகளும் குற்றச் செயல்களும் அதிகரித்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கிறார்.

கடற்படையினர் இந்தக் கட்டடத்தில் காவலரண்களை கடந்த 2 வருடங்களுக்கு மேலாக அமைத்திருந்ததுடன் சுமார் கடந்த வருட இறுதிப் பகுதியில் அவர்கள் அங்கிருந்து வெளியேறினர்.

அதன்பின்னரே இவ்வாறான சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக