28 ஏப்ரல், 2010

நித்யானந்தா வங்கி கணக்கு முடக்கத்தை ரத்து செய்ய வேண்டும்: பெங்களூர் ஆசிரம தலைவர் ஐகோர்ட்டில் மனு

நித்யானந்தா வங்கி கணக்கு முடக்கத்தை ரத்து செய்ய வேண்டும்: பெங்களூர் ஆசிரம தலைவர் ஐகோர்ட்டில் மனு
பெங்களூர் நித்யானந்தா ஆசிரமத்தில் பொறுப்பு தலைவர் நித்ய சதானந்தம் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-

நித்யானந்தா ஆசிரமத்தின் வங்கி கணக்கை போலீசார் முடக்கி வைத்துள்ளனர். இதனால் ஆசிரம பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே வங்கி கணக்கு முடக்கத்தை ரத்து செய்ய வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையே நித்யானந்தா சார்பில் அவரது வக்கீல்கள் பாலா டெய்சி, வீரகதிரவன் ஆகியோர் ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், தற்போது நித்யானந்தாவிடம் பெங் களூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

விசாரணைக்கு நித்யானந்தா ஒத்துழைப்பு கொடுத்து வருகிறார். எனவே சென்னை மற்றும் கோவையில் அவர் மீது போடப்பட்டுள்ள மோசடி வழக்கில் முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

இந்த 2 மனுக்களும் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக