28 ஏப்ரல், 2010

மட்டக்களப்பு சிறைச்சாலையில் புத்தாண்டு விளையாட்டு விழா

மட்டக்களப்பு சிறைச்சாலை நலன் புரிச்சங்கத்தின் ஏற்பாட்டில் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டவர்களுக்கு இடையில் புத்தாண்டு விளையாட்டு விழா நிகழ்வுகள் இன்று விமர்சையாக இடம்பெற்றன.

இந்நிகழ்வில் மாவட்ட சிறைச்சாலை அத்தியட்சகர் கீத ஸ்ரீ பண்டார பிரதம ஜெயிலர் என்.பிரபாகரன் நலன் புரி உத்தியோகத்தர் எஸ்.ஸ்ரீநிவாசன் உட்பட பல பிரமுகர்கள் பிரசன்னமாகி இருந்தனர்.

இங்கு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டவர்கள் கலந்து கொண்ட பாரம்பரிய புத்தாண்டு விளையாட்டு நிகழ்வுகள் பல் ஏற்பாடு செய்யப்பட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டதாக அரச தகவல் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட ஊடகப்பிரிவு தகவல் தெரிவிக்கின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக