28 ஏப்ரல், 2010

மட்டக்களப்பில் கண்ணிவெடிகள் விழிப்புணர்வு தினம் அனுஸ்டிப்பு

ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்தின் அனுசரணையில் சர்வோதய அமைப்பினால் சர்வதேச கண்ணிவெடிகள் விழிப்புணர்வு தினம் மட்டக்களப்பு நகரில் இன்று அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.

கண்ணிவெடி அபாயக்கல்வித் திட்டத்தின் கீழ் இன்று மட்டக்களப்பு தேவநாயகம் கலையரங்கில் கண்ணி வெடி விழிப்புணர்வு விசேட நிகழ்வுகள் இடம்பெற்றது. கண்ணிவெடி அபாயம் பற்றிய கண்காட்சியும் இராணுவத்தின் உதவியால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மாவட்ட இணைப்பாளர் சர்வோதய இ.மதன்ராஜ் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் சர்வோதய அமைப்பின் கிழக்கு மாகாண இணைப்பாளர் ஈ.எல்.ஏ கரீம் யுனிசெப் நிறுவன கிழக்கு மாகாண இணைப்பாளர் அஸதுர் ரகுமான் உட்பட பல பிரமுகர்கள் பிரசன்னமாயிருந்தனர்.

இம்மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளையும் சேர்ந்த பெருமளவு சிறார்கள் இந்நிகழ்வில் பங்குபற்றினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக