28 ஏப்ரல், 2010

13 மணி நேரத்தில் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்த முதல் பெண்; ஸ்பெயின் நாட்டுக்காரரின் சாதனையை முறியடித்தார்






உலகிலேயே மிக உயரமான இமயமலையின் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி பலர் சாதனை படைத்துள்ளனர். இந்த நிலையில் தென் கொரியாவை சேர்ந்த ஓ யுன்-சன் (44) என்ற பெண் 13 மணி நேரத்தில் ஏறி சாதனை படைத்துள்ளார்.

இவர் எவரெஸ்ட் சிகரத்துக்கு செல்லும் 14 மலை முகடுகளில் கடைசியில் உள்ள அன்னபூர்னாவில் இருந்து 13 மணி நேரத்தில் 26,247 அடி (8 ஆயிரம் மீட்டர்) உயர சிகரத்தில் ஏறினார்.

இதற்கு முன்பு ஸ்பெயின் நாட்டை சேர்ந்த எடுர்ன் பசயின் (26) என்பவர் 26,330 அடி உயரம் ஏறி இருந்தார். அவரது சாதனையை நேற்று இவர் முறியடித்தார். எவரெஸ்ட் உச்சியில் ஏறிய அவர் அங்கு தென்கொரிய நாட்டின் கொடியை அசைத்தார்.

இந்த சாதனை நிகழ்ச்சியை தென் கொரியாவின் கேபிஎஸ் என்ற டெலிவிஷன் நேரடியாக ஒளிபரப்பியது.

எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்த ஒயுன்-சன்னு தென் கொரிய அதிபர் லீ மியுங் வாழ்த்து செய்தி அனுப்பியுள்ளார். அவரது மிகப் பெரிய சாதனையை பாராட்டுவதாகவும் அவரைப்பற்றி பெருமைப்படுவதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளார்.

தனது சாதனை பற்றி கூறும் போது, எவரெஸ்டில் ஏறியவுடன் நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். அதை தென்கொரிய மக்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் என்று ஓயுன்-சன் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக