22 மார்ச், 2010

மன்னாரில் உலக நீர் தின விழா

உலக நீர்தின விழா இன்று திங்கட்கிழமை அடம்பன் மத்திய மகா வித்தியாலயத்தில் இடம் பெற்றது. மடு வலையகல்வி வலையத்துக்கு 11 பாடசாலைகளில் தெரிவு செய்யப்பட்ட மாணவ மாணவிகள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.

ஐரோப்பிய ஒனறியத்தின் அனுசரணையுடன் மன்னார் சேவலங்கா மன்றம் இதனை ஏற்பாடு செய்திருந்தது. இதன்போது ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான உயர்ஸ்தானி கைபிளாஸ்டன், மன்னார் அரசாங்க அதிபர் நிக்கொலாஸ் பிள்ளை, மடு வலய கல்வி பணிப்பாளர். செபஸ்ரியாம் பிள்ளை 215ஆவது படைபிரிவின் பிரிகேட் கொமாண்டர் விக்கும் லியானகே, மாந்தை மேற்கு உதவி அரசாங்க அதிபர் பிரபாகர மூர்த்தி, மன்னார் சேவலங்கா மன்றத்தின் இனைப்பாளர் பிரதீபன் மற்றும் பலர் கலந்து கொண்டிருந்தனர். இதன் போது பாடசாலை மாணவிகளின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றதோடு நடாத்தப்பட்ட சித்திரப் போட்டியில் வெற்றியீட்டிய மாணவ மாணவிகளுக்கும் பரிசில்கள் வழஙகப்பட்டன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக