22 மார்ச், 2010

கோப்பாய் ஆசிரிய பயிற்சிக் கலாசாலை மாணவர்களின் போராட்டம் இடைநிறுத்தம்

கோப்பாய் ஆசிரிய பயிற்சிக் கலாசாலையில் கடந்த வாரம் முதல் இடம் பெற்று வந்த மாணவர்களின் பகிஸ்கரிப்புப் போராட்டம் இன்று அதிபரின் இடமாற்றத்தைத் தொடர்ந்து இடை நிறுத்தப்பட்டுள்ளது.

கடந்த ஒரு வாரமாக கோப்பாய் ஆசிரிய பயிற்சிக் கலாசாலை மாணவாகள் அதிபருக்கு எதிராக வகுப்புப் பகிஸ்கரிப்புப் போராட்டதை; மேற்க்கொண்டு இருந்தார்கள்.

கடந்த 08ஆம் திகதி கல்வித் தினைக்களத்தில் இருந்து ஒரு உயர் அதிகாரி வந்து குறிப்பி;ட்ட மாணவாகளினால் சமர்ப்பிக்கப்பட்ட முறைப்பாடுகள் சம்பந்தமாக விசாரனைகளை மேற்க்கொண்டு சரியான தீர்வொன்றை எடுக்கவில்லையென தெரிவித்து இம் மாணவர்களால் வகுப்பு பகிஸ்கரிப்புப் போராட்டம் ஆரம்பமாகியது.

இன்று காலையில் கல்வி அமைச்சில் இருந்து உடனடியாக அதிபரை உரிய பொறுப்புக்களை தற்போது உப அதிபராக கடமையாற்றுபவரிடம் கையளித்தவிட்டு யாழ்ப்பபாணம் கல்வி வலயத்தில் அமைந்துள்ள ஆசிரிய வள நிலையளத்தில் கடமையாற்றும் படி பணிக்கப்பட்ட தொலை நகல் யாழ்ப்பாணம் கல்வி வலயப் பணிப்பாளர் மூலம் அதிபரிடம் கையளிக்கப்பட்டதைத் தொடர்ந்து மாணவாகள் தமது வகுப்பு பகிஸ்கரிப்பு நடவடிக்கையை கைவிட்டு வழமை போன்று வகுப்புகளுக்கு சமூகமளித்துள்ளார்கள்.

யாழ்பபாணம் கல்வி வலய கல்விப் பணிப்பாளர் திருமதி அ.வேதநாயகம் இன்று மாணவ ஆசிரியாகளுடனும் விரிவுரையாளர்களுடனும் கலந்துரையாடியமையும் குறிப்பிடத்தக்கதாகும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக