22 மார்ச், 2010

ஹெய்ட்டியில் நேற்றும் பாரிய நில நடுக்கம் : மூவர் பலி


நேற்றிரவு ஹெய்ட்டித் தீவின் வடக்கு பகுதியில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. சில வினாடிகளுக்கு இந்த நில நடுக்கம் நிலைகொண்டிருந்தது.

இதில் கட்டிடங்கள் இடிந்து விழுந்து நொறுங்கின. தொலைத் தொடர்பும் துண்டிக்கப்பட்டது. நூற்றுக்கணக்கானவர்கள் படுகாயம் அடைந்தனர்.

இன்று காலை ஐ.நா. மீட்புக்குழு ஹெய்ட்டியில் முகாமிட்டு மீட்புப்பணியைத் தீவிரப்படுத்தியது. ஒரு கட்டிடத்தை அகற்றிய போது, அதற்குள் 3 பேர் உடல் நசுங்கி இறந்து கிடந்தமை தெரிய வந்தது.

ஐ.நா.அமைதிக்குழுவைச் சேர்ந்த படையினரும் மீட்புப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மக்களுக்கு உணவு, குடிநீர் கிடைப்பது பாதிக்கப்பட்டுள்ளது.

ஹெய்ட்டித் தீவில் சனிக்கிழமை இரவும் நில நடுக்கம் ஏற்பட்டது. அந்த நிலநடுக்கம் 3.7 ரிக்டர் அளவில் பதிவாகி இருந்தது. பெரிய அளவில் சேதம் எதுவும் ஏற்பட வில்லை.

அமெரிக்கா உட்பட பல நாடுகள் ஹெய்ட்டிக்கு நிவாரணப்பொருட்களை அனுப்பி வருகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக