22 மார்ச், 2010

பொன்சேகாவின் மனைவி, அனோமாவிடம் வாக்குமூலம் பதிவு




இராணுவப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவின் மனைவி அனோமாவிடமிருந்து வாக்குமூலமொன்றை பதிவு செய்துள்ளதாக இரகசியப் பொலிசார் தெரிவிக்கின்றனர்.

அதேவேளை, ஜேவிபியின் நாடாளுமன்ற உறுப்பினர் குழுத்தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவை குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அவ்வமைப்பின் பேச்சாளரான விஜித்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து எதிர்வரும் 23ஆம், 24ஆம் திகதிகளில் குற்றப் புலனாய்வு விசாரணை அலுவலகத்திற்கு அனுரகுமார திஸாநாயக்கவை வரு மாறு கேட்டுகொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக