22 மார்ச், 2010

ராணுவத்தில் இருந்து ஓய்வுபெற்ற பிறகு ராணுவ கோர்ட்டு விசாரணையா? இலங்கை சுப்ரீம் கோர்ட்டில் சரத் பொன்சேகா மனு







ராணுவத்தில் இருந்து ஓய்வுபெற்று 6 மாதங்கள் கழிந்த பிறகு, ராணுவ கோர்ட்டு விசாரணை நடத்துவதை தடை செய்ய கோரி இலங்கை சுப்ரீம் கோர்ட்டில் சரத் பொன்சேகா மனு தாக்கல் செய்துள்ளார்.

இலங்கையில் நடந்த அதிபர் தேர்தலில் முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகா போட்டியிட்டு தோல்வி அடைந்தார். தேர்தல் முடிவுகள் வெளியான அன்றே, அவரை ராஜபக்சே அரசு கைது செய்து சிறையில் அடைத்து விட்டது. ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்றபிறகு, தன் மீது ராணுவ கோர்ட்டு விசாரணை நடத்துவதை எதிர்த்து இலங்கை சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அந்தஸ்து குறைந்த அதிகாரிகள்

அந்த மனுவில், `இலங்கை ராணுவத்தில் இருந்து 2009-ம் ஆண்டு ஜுலை மாதத்திலேயே ஓய்வுபெற்று விட்டேன். ராணுவத்தில் இருந்து ஓய்வுபெற்று 6 மாதங்களுக்கும் மேலான நிலையில், ராணுவ சட்டப்படி வருகிற மார்ச் மாதத்தில் என்னை ராணுவ கோர்ட்டில் ஆஜர்படுத்த முடியாது' என்று பொன்சேகா தெரிவித்துள்ளார்.

மேலும், தனக்கு கீழே பணி புரிந்த மேஜர் ஜெனரல்களான வீரதுங்கா, விஜேதுங்கா, ஜெயதிலகே ஆகியோருக்கு தன் மீது ராணுவ கோர்ட்டு விசாரணை நடத்தும் உரிமை இல்லை என்றும் மனுவில் குறிப்பிட்டு இருக்கிறார்.

அரசு விளக்கம்

இந்த சூழ்நிலையில், சரத் பொன்சேகாவின் குற்றச்சாட்டுகளுக்கு இலங்கை அரசு பதில் அளித்துள்ளது. ராஜபக்சே கட்சியை சேர்ந்தவரும், மூத்த மந்திரியுமான துல்லாஸ் கூறும்போது, "சரத் பொன்சேகா, நான்கு நட்சத்திர அந்தஸ்து உடைய ராணுவ ஜெனரல். அவருக்கு நிகரான ராணுவ அதிகாரியோ அல்லது அவரை விட அந்தஸ்து உயர்ந்த அதிகாரியோ எங்களிடம் இல்லை. அந்தஸ்து குறைந்த அதிகாரிகளை விசாரணை அதிகாரிகளாக நியமிக்க ராணுவ சட்டத்தில் விதிகள் உள்ளன'' என்று விளக்கம் அளித்து இருக்கிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக