22 மார்ச், 2010

இலங்கையில் மனித உரிமை மீறல்:குழு அமைப்பதில் ஐ.நா., தீவிரம்




நடந்த மனித உரிமை மீறல் குறித்து ஆய்வு செய்வதற்காக, குழு அமைக்கும் நடவடிக்கையை ஐ.நா., தீவிரப்படுத்தியுள்ளது. இதற்காக, ஐ.நா., அதிகாரிகள் விரைவில் கொழும்பு வரவுள்ளனர்.இலங்கையில் ராணுவத்துக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடந்த சண்டையின் போது, மனித உரிமை மீறப்பட்டதாக சர்வதேச அளவில் புகார் எழுந்தது. இந்த விஷயத்தில் பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தீவிரம் காட்டின. இதையடுத்து, இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல் குறித்து ஆய்வு செய்து, தனக்கு ஆலோசனை வழங்குவதற்காக, குழு ஒன்றை அமைக்கப் போவதாக ஐ.நா., பொதுச் செயலர் பான்-கீ-மூன் அறிவித்துள்ளார்.இதற்கு இலங்கை எதிர்ப்பு தெரிவித்தது.



'இலங்கையின் உள்நாட்டு விஷயத்தில் தலையிடும் செயல்' என இலங்கை அரசும், அணி சேரா நாடுகள் அமைப்பும் தெரிவித்தன. இருந்தாலும், குழு அமைக்கும் விஷயத்தில் ஐ.நா., பொதுச் செயலர் உறுதியாக இருந்தார். இதற்கிடையே, மனித உரிமை மீறல் குறித்து ஆய்வு செய்வதற்கான குழுவை அமைப்பதற்காக, ஐ.நா., உயரதிகாரிகள் விரைவில் கொழும்பு வரவுள்ளனர்.இதுகுறித்து கொழும்பில் உள்ள ஐ.நா., ஒருங்கிணைப்பாளர் நெய்ல் புனே கூறுகையில், 'குழுவின் செயல்பாடு தொடர்பான விஷயங்கள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை. இதுகுறித்த ஆலோசனைகள் நியூயார்க்கில் தொடர்ந்து நடந்து வருகின்றன. குழு அமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து ஆய்வு செய்ய, ஐ.நா., உயரதிகாரிகள் அடுத்த மாதம் கொழும்பு வருகின்றனர்' என்றார்.இந்திய தூதர் பார்வை:இதற்கிடையே, இலங்கைக்கான இந்திய தூதர் அசோக் கே கந்தா, முல்லைத் தீவு, வவுனியா, ஓட்டுசுட்டான் ஆகிய பகுதிகளுக்கு சென்று, போரால் பாதிக்கப்பட்ட தமிழர்களை மறு குடியமர்த்தும் நடவடிக்கைகளை பார்வையிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக