12 மார்ச், 2010

போதை கடத்தல் புள்ளி துபாயில் திடீர் கைது





துபாய் : சர்வதேச போலீசான, "இன்டர்போல்' அமைப்பால் தேடப்படும் இந்தியாவைச் சேர்ந்தவர், துபாயில் கைது செய்யப்பட்டார். இந்தியாவைச் சேர்ந்தவர் குலாம் ஹைதர் தாவூத் மதியா. போதை மருந்து கடத்தலில் உலகப் பிரசித்தி பெற்ற 10 பேரில் ஒருவர் இக்பால் மிர்ச்சி; இவரும் இந்தியாவைச் சேர்ந்தவர் தான். இந்த இருவரும் கொலை வழக்கு ஒன்றில் சம்பந்தப்பட்டதாக இந்திய அரசால் தேடப்பட்டு வருபவர்கள்.
பின் குலாமைத் தேடி, இன்டர்போல் போலீசார் வாரன்ட் பிறப்பித்தனர். 1997ல் கிழக்கு ஆப்ரிக்காவில் உள்ள மலாவியில் குலாம் கைது செய்யப்பட்டார். பின் ஜாமீனில் வெளியே வந்த அவர், பாகிஸ்தானுக்கு தப்பித்து சென்றார். பாகிஸ்தானில் பாஸ்போர்ட் பெற்று துபாயில், "எமிரேட்ஸ் ஹில்ஸ்' பகுதியில் தன் குடும்பத்துடன் குடியேறி பல ஆண்டுகளாக வசித்து வருகிறார். இவரை கடந்த மாதம் துபாயில் போலீசார் கைது செய்தனர். ஆனால், துபாயில் இவர் சட்டவிரோத காரியம் எதிலும் ஈடுபடவில்லை என்றும், துபாயில் அவர் ஒரு தொழிலில் ஈடுபட்டு வந்தார் என்றும், அங்குள்ள போலீசார் தெரிவித்துள்ளனர்.
குலாம் இந்தியாவுக்குக் கொண்டுவரப்படுவாரா என்பது குறித்து விவரம் தெரியவில்லை. ஐக்கிய அரபு நாடுகள் பிரதமரும் துணை அதிபருமான ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம், நேற்று டில்லிக்கு வந்த நேரத்தில் இச்சம்பவம் குறித்து செய்திகள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக