12 மார்ச், 2010

கிழக்குப் பல்கலைக்கழக மாணவர் பேரவை கலைப்பு : துணைவேந்தர் ராஜினாமா

கிழக்கு பல்கலைக்கழகத்தின் மாணவர் பேரவை நேற்றுடன் கலைக்கப்பட்டது. துணை வேந்தர் கலாநிதி என். பத்மநாதன் தனது பதவியிலிருந்து ராஜினாமா செய்துள்ளார் என பிபிசி இணையம் செய்தி வெளியிட்டுள்ளது.

நேற்று முன் தினம் துணை வேந்தரை, ஏற்கனவே மாணவர் பேரவை பிரதிநிதிகளாக அங்கம் வகித்தவர்கள் உட்பட சில மாணவர்கள் சந்தித்து பதவி விலக வேண்டும் என அழுத்தம் கொடுத்ததாகவும் இதன் காரணமாகவே அவர் பதவி விலகியதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையிலேயே நேற்றுப் பல்கலைக்கழகத்தின் மாணவர் பேரவையும் கலைக்கப்பட்டுள்ளது.

துணை வேந்தர் பதவி விலக வேண்டும் எனக் குறிப்பிட்ட மாணவர் பேரவை பிரதிநிதிகள் கொடுத்த அழுத்தத்திற்கும் தமக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என அநேக மாணவர்கள் எழுத்து மூலம் பல்கலைக்கழக நிர்வாகத்திற்குத் தெரிவித்துள்ளனர்.

அநேகமான மாணவர்களின் வேண்டுகோளின் பேரிலேயே பல்கலைக்கழக மாணவர் பேரவையைக் கலைக்க தீர்மானிக்கப்பட்டதாக பதில் துணை வேந்தர் கலாநிதி கே. பிரேம்குமார் கூறுகின்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக