12 மார்ச், 2010

அடுத்த மாதம் முதல் ஓமந்தை வரை ரயில் சேவை




யாழ் தேவி ரயில் சேவை அடுத்த மாதம் முதல் ஓமந்தை வரை நீடிக்கப்படுமென ரயில்வே திணைக்களம் தெரிவித்தது. தாண்டிக்குளத்தில் இருந்து ஓமந்தை வரையான 10 கிலோ மீட்டர் தூர ரயில் பாதையை மீளமைக்கும் பணிகள் பெருமளவு முடிவடைந்துள்ளதாக பதில் ரயில்வே பொது முகாமையாளர் சந்ரதிலக கூறினார். 200 மீட்டர் நீளமான ஓமந்தை ரயில் நிலையத்தின் முதலாம் கட்டப் பணிகள் இம்மாத இறுதிக்குள் பூர்த்தி செய்யப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

யுத்த சூழ்நிலை காரணமாக வடபகுதிக்கான ரயில் சேவைகள் பல வருடங்களாக தடைப்பட்டன.

ஜனாதிபதியின் பணிப்புரையையடுத்து வவுனியாவில் இருந்து தாண்டிக்குளம் வரையான ரயில்பாதை துரிதமாக மீளமைக்கப்பட்டதோடு அடுத்த மாதம் முதல் தாண்டிக்குளத்தில் இருந்து ஓமந்தை வரையில் ரயில் சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

400 மில்லியன் ரூபா செலவில் ரயில் பாதைகள் மீளமைக்கப்பட்டு வருவதோடு ஓமந்தை ரயில் பாதையை மீளமைக்க 3.6 மில்லியன் ரூபா செலவிடப்படவுள்ளது. பிரதியமைச்சர் லயனல் பிரேமசிறி மன் றம் ரயில் நிலையத்தை நிர்மாணிக்கும் பணியை பொறுப்பேற்றுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக