12 மார்ச், 2010

பொதுத் தேர்தலின் பின் 3 ஆண்டுகால இடைக்கால ஆட்சி உருவாக்கப்படும் : ஜேவிபி

எதிர்வரும் பொதுத் தேர்தலின் பின்னர், மூன்று ஆண்டுகால இடைக்கால ஆட்சி ஒன்று உருவாக்கப்படும் என ஜே.வி.பி. நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஏனைய கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இடைக்கால ஆட்சி ஒன்றை உருவாக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இதன் போது, நிறைவேற்று அதிகாரத்தை ரத்து செய்தல், தேர்தல் முறைமையை மாற்றி அமைத்தல், மக்களின் பிரதான பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக் கொடுத்தல் போன்றவை தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தப்படவுள்ளது.

ஜெனரல் சரத் பொன்சேகாவை அரசாங்கம் தொடர்ச்சியாகத் தடுத்து வைத்துள்ளது.

சரத் பொன்சேகாவுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்" என அவர் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக