12 மார்ச், 2010

ஆராச்சிகட்டுவ இறால் பண்ணையில் 40 கிலோ ஹெரோயின் கண்டுபிடிப்பு




சிலாபம், ஆராச்சிகட்டுவ பகுதியிலுள்ள பிமுத்துபந்திபீ மீன்பிடி கிராமத்தில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த 40 கிலோ ஹெரோயின் போதைப் பொருட்களை நேற்று பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

பிமுத்துபந்திபீ கிராமத்திலுள்ள இறால் பண்ணையொன்றினுள் மிகவும் சூட்சுமமாக பிளாஸ்டிக் பைகளில் அடைக்கப்பட்டு ள்ள 40 கிலோ ஹெரோயின் போதைப்பொருள் களை பொலிஸ் போதை ஒழிப்பு பிரிவு (நாகொடிக்) கைப்பற்றியது.

கடந்த பெப்ரவரி மாதம் 18ஆம் திகதி முந்தல் பகுதியில் 30 கிலோ ஹெரோயின் போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டன.

இச்சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நாட்டை விட்டு தப்பிப்போக எத்தணித்த போது விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள மேற்படி நபரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் போதே முத்துபந்தி கிராமத்தில் சந்தேக நபருக்கு சொந்தமான இறால் பண்ணையில் 40 கிலோ ஹெரோயின் புதைத்துவைக்கப்பட்டுள்ள விடயமும் தெரியவந்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக