12 மார்ச், 2010

சட்டவிரோதமாக தங்கியதற்காக 12 இந்தியர்கள் பிரிட்டனில் கைது




லண்டன் : சட்டவிரோதமாக பிரிட்டனில் தங்கி வேலைபார்த்துவந்ததாக, ஒரு பெண் உட்பட 12 இந்தியர்களை பிரிட்டன் குடியேற்ற அதிகாரிகள் கைது செய்துள்ளனர். பிரிட்டனில் சட்டவிரோதமாக குடியேறுபவர்கள் மீது அந்நாட்டு அரசு கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக, ஹீத்ரூவில் உள்ள ஒரு சரக்கு கிட்டங்கியில் வேலைபார்த்த பணியாளர்களிடம் குடியுரிமை பற்றி விசாரணை நடத்தினர்.
அதில், இந்தியாவைச் சேர்ந்த எட்டுப் பேரும், சட்டவிரோதமாக குடியேறியுள்ளது தெரியவந்தது. அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர். அந்தக் கிட்டங்கி நிறுவனத்துக்கு 58 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. அதேபோல், ஹேஸ் மற்றும் சவுத்ஆல் என்ற பகுதிகளிலுள்ள மூன்று குடியிருப்புகளிலும் சோதனை நடத்தப்பட்டது. அதில் ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் ஒரு பெண் உட்பட நான்கு பேர் இந்தியர்கள். இருவர் தென்னாப்ரிக்காவை சேர்ந்தவர்கள்.
இந்த 14 பேரில் ஏழு பேருக்கு, குடியுரிமையை ரத்து செய்து சொந்த நாட்டிற்கு திரும்ப அனுப்பவும் , மற்றவர்களுக்கு நிறுவனம் மூலம் சுற்றுலா விசா எடுப்பதற்கும் உரிய நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர். பிரிட்டனில் முறையாக தங்கி வேலை பார்ப்பதற்குரிய ஆவணங்கள், பணியாளர்களிடம் இருக்கிறதா என்று சோதனை செய்யாத நிறுவனங்களுக்கு, ஒரு நபருக்கு ஆறு லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் என்ற விகிதத்தில் அந்நாட்டில் அபராதம் விதிக்கப்படும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக