18 மார்ச், 2010

வவுனியா நலன்புரி நிலையங்களிலுள்ள மேலுமொரு தொகுதியினர் மீள்குடியேற்றம்-

யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து வவுனியா நலன்புரி முகாம்களில் தங்கியுள்ள மேலும் ஒருதொகுதியினர் மீள்குடியமர்த்தப்படவுள்ளனர். இதன்படி கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 300 குடும்பங்களையே இவ்வாறு மீள்குடியமர்த்த நடவடிக்கை எடுத்துள்ளதாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ஆர்.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். வவுனியா நலன்புரி முகாம்களிலுள்ள கிளிநொச்சி மாவட்டத்தின் அக்கராயன்குளம், ஆனைவிழுந்தான், ஸ்கந்தபுரம் ஆகிய பகுதிகளில் இவர்கள் நாளையதினம் மீள்குடியமர்த்தப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை நலன்புரி நிலையங்களில் எஞ்சியுள்ள சிலரையும் விரைவில் அவர்களது சொந்த இடங்களில் மீள்குடியமர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக மீள்குடியேற்ற அமைச்சு தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக