18 மார்ச், 2010

தெகிவளையில் இருநாள் இராஜ யோக தியானக் கருத்தரங்கு



இருநாள் இராஜ யோக தியானக் கருத்தரங்கு எதிர்வரும் 20ஆம் 21ஆம் திகதிகளில் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை தெகிவளை, 55 பீற்றர்ஸ் லேனில் அமைந்துள்ள பிரம்ம குமாரிகள் இராஜ யோக தியான நிலையத்தில் நடைபெறும்.

ஆங்கில மொழியில் மாத்திரமே நடைபெறவுள்ள இக்கருத்தரங்கில் பங்குபற்ற விரும்புபவர்கள் இன்று 18ஆம் திகதி உடனடியாகப் பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். (பங்குபற்றுபவர்களின் எண்ணிக்கை 30க்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது) மதிய போசனமும், மென்பானமும் வழங்கப்படும்.

இராஜ யோக தியானம் என்பது மன வலிமையையும், வளங்களையும் கட்டியெழுப்பப் பயன்படுத்தும் தியானமுறையாகும். இத் தியானம் மன அமைதியையும், ஆரோக்கிய வாழ்வையும், தெளிவான புத்தியையும், மன ஒருமைப்பாட்டையும், சந்தோஷத்தையும், ஆன்மீக சக்திகளையும் ஒருவர் தன்னுடைய வாழ்க்கையில் உருவாக்குவதற்கு உதவுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக