18 மார்ச், 2010

பாகிஸ்தானில் தீவிரவாதிகள் கடத்திய இங்கிலாந்து சிறுவனை ரூ.80 லட்சம் கொடுத்து மீட்பு





இங்கிலாந்தை சேர்ந்த 5 வயது சிறுவன் ஷாகில்சயீத் பாகிஸ்தானில் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள ஜீலம் பகுதியில் தனது பாட்டி வீட்டிற்கு விடுமுறையை கழிக்க வந்திருந்தான்.

வீட்டில் இருந்த அவன் கடந்த 3-ந்தேதி மர்ம நபர்களால் கடத்தி செல்லப்பட்டான். எனவே அவனை மீட்டு தரும்படி இங்கிலாந்து தூதரகம் பாகிஸ்தான் அரசை கேட்டுக் கொண்டது.

இதைத்தொடர்ந்து இண்டர்போல் போலீஸ் உதவி நாடப்பட்டது. இந்த நிலையில் 13 நாட்களுக்கு பிறகு சிறுவன் ஷாகில் சயீத் பத்திரமாக மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டதாக பாகிஸ்தான் உள்துறை மந்திரி ரஹ்மான் மாலிக் தெரிவித்தார்.

அவன் எப்படி மீட்கப்பட்டான் என்ற தகவல் வெளியிடப்படாமல் இருந்தது. இந்த நிலையில் அவன் பிணைத்தொகையாக ரூ.80 லட்சம் கொடுத்து மீட்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த தகவலை ஸ்பெயின் நாட்டு போலீசார் தெரிவித்துள்ளனர். சிறுவன் கடத்தப்பட்ட 3-வது நாளில் இருந்து அவனது குடும்பத்தாரிடம் மர்ம நபர்கள் டெலிபோனில் பேசி பிணைத்தொகை கேட்டுள்ளனர்.

இதைத்தொடர்ந்து அச்சிறுவனின் தந்தை பணத்துடன் மான்செஸ்டருக்கு பயணம் செய்தார். பின்னர் பாரீ சுக்கு சென்றார். அங்கு கடத்தல்காரர்களிடம் நடுரோட்டில் வைத்து பணம் கொடுத்தார்.

உடனே பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் போலீசார் கடத்தல்காரர்களை விரட்டி சென்றனர். பின்னர் ஸ்பெயின் நாட்டு எல்லையில் வைத்து கடத்தல்காரர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர். இதற்கிடையே கடத்தப்பட்ட சிறுவன் ஷாகில் சயீத் விடுவிக்கப்பட்டான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக