18 மார்ச், 2010

ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தின் கீழ் 3500 ரூபா சம்பளம் வழங்கப்படும்;-ரணில்




ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தின் கீழ் சம்பள அதிகரிப்பை முதல் கட்டமாக 3500 ரூபா வழங்கப்படும் என்பதனை எதிர்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்று மீண்டும் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைப்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே இதனை கூறியுள்ளார். தொடர்ந்து உரையாற்றிய எதிர்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க, உலக பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ளது எனவும் இந்த வருடம் உலக பொருளாதாரத்திற்கு என்ன நடைபெறும் என்பதனை கூறமுடியாது எனவும் தெரிவித்தார்.

இதன் காரணமாக எவ்வித சலுகைகளையும் மக்களுக்கு வழங்க வேண்டாம் என நான் யாருக்கும் கூறவில்லை எனவும் அரச ஊழியர்களுக்கு முதல் கட்டமாக 3500 ரூபா சம்பள உயர்வினை வழங்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதன் பின்னர் 12 மாதங்கள் செல்வதற்கு முன்னர் அடுத்தகட்ட சம்பள உயர்வினை வழங்குவதாகவும் ,சம்பள நிர்ணயசபை ஒன்றின் ஊடாக தனியார் துறையினருக்கும் சம்பள உயர்வினை நிச்சயமாக பெற்று கொடுப்பதாகவும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக