18 மார்ச், 2010

மன்னார் பாலம் மற்றும் நீரூற்றுப்பாதை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவினால் திறந்து வைப்பு-

மன்னார் பெரு நிலப்பரப்பையும் மன்னார் தீவையும் இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள புதியபாலம் மற்றும் நீரூற்றுப் பாதை ஆகியவற்றை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இன்றுமுற்பகல் திறந்து வைத்துள்ளார். இந்த நிகழ்வில் வடமாகாண ஆளுநர் மேஜர்ஜெனரல் ஜீ.ஏ.சந்திரசிறி, ஜப்பானியத் தூதுவர் குனியோ டகாசி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர். ஜப்பானிய அரசின் 2460மில்லியன் உதவியுடன் மன்னார் களப்பினை ஒட்டி இந்தப்பாலம் மற்றும் நீரூற்றுப்பாதை ஆகியன அமைக்கப்பட்டுள்ளன. வடக்கு கிழக்கு அபிவிருத்தி செயற்திட்டத்தின்கீழ் இந்தப்பாலம் மற்றும் நீரூற்றுப் பாதை ஆகியன அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் மன்னாரிலுள்ள சுமார் 41ஆயிரம்பேர் நன்மை பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக