18 மார்ச், 2010

கோவாவுக்கு சுற்றுலா வந்த ரஷிய பெண் கற்பழித்து கொலை? ஓட்டல் அறைக்குள் பிணமாக கிடந்தார்




கோவாவுக்கு சுற்றுலா வந்த இங்கிலாந்து பெண்ணை கடந்த ஆண்டு மந்திரி ஒருவரின் மகனும் அவனது கூட்டாளிகளும் கற்பழித்து கொன்றனர். இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் இன்று கோவா ஓட்டல் ஒன்றில் ரஷிய பெண் மர்மமாக இறந்து கிடந்தார். அவருடைய பெயர் எலனா (வயது 33). 2 நாட்களுக்கு முன்பு கோவா வந்த அவர் ஓட்டலில் தங்கினார்.அவருடைய அறை நீண்ட நேரம் ஆகியும் திறக்கப்படாமல் இருந்தது. அறை உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது.

எனவே ஓட்டல் ஊழியர்கள் வேறு சாவியை கொண்டு திறந்து பார்த்தனர். அங்கு அவர் இறந்து கிடந்தார். அவர் கற்பழித்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. பரிசோதனை முடிந்த பிறகே சாவு எப்படி ஏற்பட்டது என்பது பற்றி தெரிய வரும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக