18 மார்ச், 2010

வீரபாண கிராமத்தில் உள்ள பிள்ளைகள் தமது கல்வி நடவடிக்ககைளை மேற்க்கொள்வதில்


மாத்தறை மாவட்டத்தின் தவளம் பிரதேச செயலகத்திற்குட்பட்ட வீரபாண கிராமத்தில் உள்ள பிள்ளைகள் தமது கல்வி நடவடிக்ககைளை மேற்க்கொள்வதில் பல அசௌகரியங்களை எதிர்நோக்கிவருகின்றனர்.இப்பிரதேசததில் 450 சிங்கள குடும்பங்களும் 100 தோட்டத் தொழில் புரியும் தமிழ் குடுப்பங்களும் வசித்துவருகின்றன.

இப்பிள்ளைகள் வீரபாண கணிஸ்ட வித்தியாலயத்தில் கல்வி கற்று வருகின்றனர். இப்பாடசாலையில் பௌதீகவளங்கள் மற்றும் ஆசிரியப்பற்றாக்குறைகள் நிலவுகின்றன. அத்தோடு இங்கு 50 தமிழ் மாணவர்கள் சிங்கள மொழியில் கல்வி கற்பது குறிப்பிடத்தக்கது.

இங்குள்ள வீரபாண கணிஸ்ட வித்தியாலயத்தில் தமிழ் மற்றும் சிங்கள மாணவர்கள் ஒற்றுமையாக கல்விகற்று வருகிறார்கள். இருப்பினும் இப்பாடசாலையில் நிலவும் வளப்பற்றாக்குறையானது இவர்களது கல்வி முன்னேற்றத்தில் பல பிண்ணடைவுகளை ஏற்ப்படுத்தியுள்ளது.

ஒரு ஆரோக்கியமான மாணவ சமூகம் உருவாகுவதற்க்கு பௌதீக வளங்கள் இன்றியமையாததொன்றாகும். எனவே இப்பாடசலையை அபிவிருத்தி செய்வதனுடாக தமது பிள்ளைகளின் கல்வி முன்னேற்றத்தை ஓரளவு அபிவிருத்தி அடையச் செய்ய முடியுமென இப்பிரதேச மக்கள் எதிர்பார்க்கின்றனர். இவற்றை கவனத்திலெடுக்க வேண்டியது சம்பந்தப்பட்டேரிள் கடமையாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக