18 மார்ச், 2010

தேர்தல் காலங்களில் பிரச்சினைகளில் ஈடுபடுபவர்களுக்கு அவர்களின் வெற்றியின் பின் பதவிகளை வழங்காமல் இருக்க ஜனாதிபதி தீர்மானம்-


அமைச்சர் மைத்திரிபால
தேர்தல் காலங்களில் பிரச்சினைகளில் ஈடுபடுபவர்களுக்கு அவர்களின் வெற்றியின் பின் பதவிகளை வழங்காமல் இருக்க ஜனாதிபதி தீர்மானமாணித்துள்ளதாக ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயளாளர் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

வேட்பாளர்கள் மத்தியில் பிரச்சினை ஏற்படுவது மட்டும் தேர்தலில் இடம் பெறும் விடயம் அல்ல என தெரிவித்த அவர் தேர்தல் முறைமை காரணமாகவே இந்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இன்று நடைப்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார். இதேவேளை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கும், ஐனநாயக தேசிய கூட்டமைப்பினதும் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிக்கோள் எதுவும் இல்லை என ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி தெரிவிக்கின்றது.

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது ஐக்கிய தேசிய கட்சியும் , மக்கள் விடுதலை முன்னணியும் ஒன்றாக இனைந்து வெளியிட்ட தேர்தல் விஞ்ஞாபனத்தை இரண்டாக பிரித்து இரண்டு கட்சிகளும் நேற்று வெளியிட்டதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இவர்களுடைய கொள்கை பிரகடனங்கள் அனைத்தும் ஜனாதிபதியின் கொள்கைகளை ஒத்ததாகவே காணப்படுகின்றது என அவர் மேலும் தெரிவித்தார். எதிர் வரும் பொது தேர்தலில் அரசாங்கம் 6 இலடசத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்று வெற்றி பெறும் எனவும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக