18 மார்ச், 2010

தெரிவத்தாட்சி அதிகாரிகள், உதவி தேர்தல் ஆணையாளர்களுடன் தேர்தல் ஆணையாளர் சந்திப்பு-

தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகள் மற்றும் மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர்களை தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் தயானந்த திசாநாயக்க சந்திக்கவுள்ளார். இச்சந்திப்பு தேர்தல்கள் செயலகத்தில் நாளை மறுதினம் இடம்பெறவுள்ளதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் டபிள்யூ பி.சுமணசிறி தெரிவித்துள்ளார். மேலும் இச்சந்திப்பின்போது வாக்களிப்பு மத்திய நிலையங்களின் பாதுகாப்பு மற்றும் வாக்குகள் எண்ணும் மத்திய நிலையங்கள் குறித்து ஆராயப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் எதிர்வரும் வாரத்தில் சிரேஸ்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபடும் அதிகாரிகள் ஆகியோருடன் நடைபெறவுள்ள சந்திப்பின்போது தேர்தல் கடமைகள் குறித்து அறிவுறுத்தப்படவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக