2 மார்ச், 2010

உலகம் அழிந்து விடும் என்று பயந்து கணவன்-மனைவி தற்கொலை; குழந்தைசுட்டுக்கொலை


அர்ஜென்டினா நாட்டில் உள்ள கோயா என்ற இடத்தைச் சேர்ந்தவர் லோட்டரோ. அவருடைய மனைவி மரியம். இவர்களுக்கு ஆண் மற்றும் பெண் குழந்தைகள் இருந்தனர். லோட்டரோ தம்பதியினர் உலகம் வெப்பமயமாவதால் விரைவில் உலகம் அழிந்து விடும் என பயந்தனர்.

எனவே உலகம் அழியும் போது அதில் சிக்கி பலியாகி விடக்கூடாது என பயந்த அவர்கள் குடும்பத்தோடு தற்கொலை செய்ய முடிவு செய்தனர்.

இதையடுத்து கணவன்- மனைவி இருவரும் தங்கள் இரு குழந்தைகளையும் சுட்டு விட்டு தங்களை தாங்களே சுட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

ஆனால் 2 குழந்தைகளையும் சுட்டதில் ஆண் குழந்தை மட்டும் உயிரிழந்தது. 7 மாத பெண் குழந்தை நெஞ்சில் குண்டு பாய்ந்து இருந்தது. ஆனாலும் உயிரிழக்க வில்லை.

3 நாட்களுக்கு பிறகுதான் போலீசாருக்கு இந்த சம்பவம் தெரிய வந்தது. அவர்கள் வீட்டுக்கு சென்று பார்த்த போது பெண் குழந்தை மட்டும் உயிருக்கு போராடி கொண்டிருந்தது. அவளை ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளனர்.

இந்த தம்பதினர் தற்கொலைக்கான காரணம் குறித்து எழுதிய கடிதம் ஒன்று அருகில் இருந்தது. அதில், உலக வெப்பமாயமாவதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்காததே காரணம் என்று குற்றஞ்சாட்டியிருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக