2 மார்ச், 2010

வைத்தியசாலைக்கென சனத் ஜயசூரிய ரூ. 5 இலட்சம் நன்கொடை



மாத்தறை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிடும், இலங்கையின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சனத் ஜயசூரிய மாத்தறை ஆஸ்பத்திரியின் அபிவிருத்திக்காக ஐந்து இலட்சம் ரூபாவை வழங்கினார். மாத்தறை ஆஸ் பத்திரி பணிப்பாளர் சமுர்த்தி சமரகோனிடம் மேற்படி நிதி வழங்கப்பட்டது.

சனத் ஜயசூரிய கூறியதாவது:- ஆஸ்பத்திரிகளில் நிலவும் குறைபாடுகளை நிவர்த்தி செய்வது எமது கடமையாகும். அரசாங்கத்தால் மாத்திரம் சகல பிரச்சினை களையும் தீர்க்க முடியாது. வசதி படைத்த மக்கள் ஆஸ்பத்திரிக்கு உதவுவது கட்டாயம். ஏழை நோயாளர்களிடத்தில் நாம் அன்பு செலுத்த வேண்டும்.

அரசியல் நோக்கங்கருதி இப் பணத்தை வழங்க வில்லை. இரண்டு வருடங்களுக்கு முன்பே இந்த ஆஸ்பத்திரியை அபிவிருத்தி செய்ய நான் திட்டமிட்டேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக