2 மார்ச், 2010

மாத்தறை தெனியாய பகுதியில் இரண்டு குழுக்களுக்கு இடையில் மோதல் 10 பேர் காயம்

மாத்தறை தெனியாய பகுதியில் இரண்டு குழுக்களுக்கு இடையில் மோதலில் 10 பேர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. காயமடைந்தவர்களில் நான்கு பேரின் நிலைமை கவலைக்கிடமாக காணப்படுவதாக வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வாய்த் தர்க்கமே கைகலப்பாக வெடித்துள்ளனெதவும், காயமடைந்தவர்களில் நான்கு பெண்களும் அடங்குவதாகவும் குறிப்பிடப்படுகிறது. காயமடைந்தவர்கள் மாத்தறை மற்றும் தெனியா வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக