24 பிப்ரவரி, 2010

வேட்பாளர் நியமனப் பத்திரங்களை தாக்கல் செய்யும் பணிகள் துரிதம்

. . சு. மு. காலியிலும், ஜனசெத பெரமுன வன்னி, களுத்துறையிலும், தேசிய அபிவிருத்தி முன்னணி கண்டியிலும் வேட்புமனுத் தாக்கல்
பொதுத் தேர்தல் வேட்பு மனுக்களை ஏற்பதற்கான கால அவகாசம் நிறைவடைவதற்கு இன்னும் இரண்டே தினங்கள் எஞ்சியுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தமது வேட்பாளர் நியமனப் பத்திரங்களைத் தாக்கல் செய்யும் பணிகளைத் துரிதப்படுத்தியுள்ளன.

வேட்பு மனுக்களை ஏற்கும் பணி 26ஆம் திகதி வெள்ளிக்கிழமை நண்பகலுடன் நிறைவடைவதுடன் நாளை (25) வியாழன் நண்பகல் வரை சுயேச்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்த முடியும். இந்நிலையில் நேற்று ஏழு அரசியல் கட்சிகளும் 14 சுயேச்சை குழுக்களும் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள் ளன.

காலி, வன்னி, அனுராதபுரம், நுவரெலியா ஆகிய மாவட்டங்களுக்காக ஜனசெத முன்னணியும் திருமலை மாவட்டத்துக்காக சிங்கள மஹா சம்மத பூமி புத்ர கட்சியும் யாழ் மற்றும் வன்னி மாவட்டங்களுக்காக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பும், கேகாலையில் இலங்கைத் தொழிலாளர் கட்சியும் கண்டி, மொனராகலை மாவட்டங்களில் தேசிய அபிவிருத்தி முன்னணியும் களுத்துறையில் தேசப்பிரேமி ஜாதிக முன்னணியும் நேற்று வேட்புமனுக்களை தாக்கல் செய்தன.

இதேவேளை கொழும்பு, கம்பஹா, குருணாகல் ஆகிய மாவட்டங்களிலிருந்து ஒவ்வொரு சுயேச்சைக் குழு வீதமும் இரத்தினபுரி, புத்தளம், கேகாலை, களுத்துறை ஆகிய மாவட்டங்கள் ஒவ்வொன்றிலுமிருந்து இரண்டு சுயேச்சைக் குழுக்கள் வீதமும் மாத்தளையில் மூன்று சுயேச்சைக் குழுக்களும் நேற்று வேட்புமனுக்களை தாக்கல் செய்ததாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்தது. 58 சுயேச்சைக் குழுக்கள் நேற்று கட்டுப்பணம் செலுத்தியிருப்ப தாகவும் செயலகத்தின் அதிகாரியொருவர் கூறினார்.

கடந்த 19ஆம் திகதி முதல் நேற்று வரை 170 சுயேச்சைக் குழுக் கள் கட்டுப்பணம் செலுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் காலி மாவட்டத்திற்கான வேட்பாளர் நியமனப் பத்திரம் நேற்று (23) தாக்கல் செய்யப்பட்டது.

மாவட்டத்தில் தலைமை வேட்பாளர் அமைச்சர் பியசேன கமகே தலை மையில் தாக்கல் செய்யப்பட்டது. வன்னி தேர்தல் மாவட்டத்திற்குரிய வேட்பு மனுவை எதிர்வரும் வெள்ளிக்கிழமை . . சு. மு. தாக்கல் செய்யவுள்ளது.

வேட்பாளர் பட்டியலில் முத ன்மை வேட்பாளராக அமைச்சர் றிசாத் பதியுதீன் போட்டியிடுகிறார். தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன் னாள் உறுப்பினர்கள் இருவர் உள்ளி ட்ட ஒன்பது பேர் இடம்பெற்று ள்ளதோடு வவுனியா வர்த்தக சங்க முக்கியஸ்தர் ஒருவரும் இந்த வேட் பாளர் பட்டியலில் இடம் பெற்று ள்ளார்.

இதற்கிடையில் தமிழ்தேசிய கூட்ட மைப்பினர் இன்று புதன்கிழமை வன்னி மாவட்ட தேர்தலுக்குரிய வேட்பு மனுவை வவுனியா மாவ ட்ட செயலகத்தில் தாக்கல் செய் கின்றனர். முன்னாள் வன்னி எம்.பி யும் ரெலோ தலைவருமான செல் வம் அடைக்கலநாதன் முதன்மை வேட்பாளராய் போட்டியிடுகிறார். ஏனைய ஒன்பது பேரில் முன்னாள் உறுப்பினர்கள் சிவசக்தி ஆனந்தன், வினோ நோகராதலிங்கம், எஸ். சூசைதாசன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

ஜனசெத்த பெரமுன நேற்று வன்னி மாவட்டத்திற்காக வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளது. முதன்மை வேட்பாளர் சிறிபால ஹெட்டியாராச்சி மனுவை கையளித் துள்ளார். ஒன்பது வேட்பாளர்களில் இருவர் தமிழர்களாவர்.

நேற்று நண்பகல் வரை வவுனியா தேர்தல் அலுவலகத்தில் வன்னி மாவட்ட தேர்தலுக்கு மூன்று அரசியல் கட்சிகள் வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளன.

மூன்று சுயேச்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளன.

ஜனசெத பெரமுன நேற்று மாலை களுத்துறை மாவட்டச் செய லாளர் எஸ். ஹபுஆரச்சியிடம் நிய மனப் பத்திரத்தை கையளித்துள்ளது.

தேசிய அபிவிருத்தி முன்னணி கண்டி மாவட்டத்திற்கான வேட்பு மனுவை கண்டி மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரியான எஸ். எம். கோட்டாப ஜயரத்ன முன்னி லையில் நேற்று (23) தாக்கல் செய்து ள்ளது. அம்பாறை மாவட்டத்தில் நேற்றுவரை 31 சுயேச்சைக் குழுக்கள் கட்டுப் பணம் செலுத்தியுள்ளதாக, அம்பாறை மாவட்ட உதவித் தேர் தல் ஆணையாளர் எம். எம். எஸ். கே. பண்டாரமாப்பா தெரிவித்தார்.

எனினும், இம் மாவட்டத்தில் எந்தவொரு அரசியல் கட்சியும் இதுவரை வேட்புமனுக்களைத் தாக் கல் செய்யவில்லை. ஆனால், 2 சுயேச்சைக் குழுக்கள் நேற்று நண்ப கலளவில் தங்கள் வேட்பு மனு க்களை தாக்கல் செய்தன.

மலையக மக்கள் முன்னணி இன்று (24) புதன்கிழமை பதுளை மாவட்டத்துக்கான வேட்பு மனுவை தாக்கல் செய்கின்றது.

பதுளை மாவட்ட மலையக மக்கள் முன்னணியின் முதன்மை வேட்பாளராக ஊவா மாகாண சபை உறுப்பினரும், மலையக மக் கள் முன்னணியின் உப தலைவர் களில் ஒருவருமான . அரவிந்த குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

மலையக மக்கள் முன்னணி பதுளை, நுவரெலியா மாவட்டங் களில் தனியாக மண்வெட்டி சின்னத்தில் களமிறங்குகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக