24 பிப்ரவரி, 2010

த.தே.கூ.வன்னி மாவட்டத்திற்கான வேட்பு மனு தாக்கல் இன்று



பொதுத் தேர்தலில் வன்னி மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை இன்று வவுனியாவில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தாக்கல் செய்யவுள்ளது.

இன்று காலை 10 மணிக்கு தமது வேட்புமனுவை தாக்கல் செய்யவுள்ளதாக கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரொருவர் தெரிவித்தார்.

அதேவேளை ஐக்கிய தேசிய முன்னணி,ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி என்பன தமது வேட்பு மனுக்களை நாளை தாக்கல் செய்யவுள்ளதாக கட்சிகளின் முக்கியஸ்தர்கள் தெரிவித்தனர்.

அதேவேளை ஐக்கிய தேசிய முன்னணி,ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி என்பன 3 மாவட்டங்களில் தமது வேட்பு மனுக்களை இதுவரை தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக