29 டிசம்பர், 2009



வடக்கில் கைவிடப்பட்ட ஒரு இலட்சத்து 27,875 ஏக்கர்
மேட்டு நிலத்தில் பயிரிட நடவடிக்கை
- பெரும்போகத்தின்போது 10,592 ஏக்கரில் பயிர்ச்செய்கை

வட மாகாணத்தில் மோதல் காரணமாக கைவிடப்பட்ட உள்ள ஒரு இலட்சத்து 27 ஆயிரம் ஏக்கர் மேட்டு நிலத்தில் மீண்டும் பயிரிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்ரசிறி தெரிவித்தார். தற்பொழுது 33,980 ஏக்கரில் பயிரிடப்பட்டு வருவதோடு பெரும்போகத்தின் போது 10,592 ஏக்கரில் பயிர்ச் செய்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் ஆளுநர் தெரிவித்தார்.

மேட்டு நிலங்களில் மீண்டும் பயிhச்செய்கைகளை ஆரம்பிப்பதற்காக இதுவரை 24,500 கிலோ கிராம் விதைகள் விநியோகிக்கப்பட்டுள்ளன. வீட்டில் மரக்கறி பயிரிடுவதற்காக 4,200 பக்கட் விதைகளும் வழங்கப்பட்டுள்ளது. தற்போது மன்னார் மாவட்டத்தில் 1,639 ஏக்கரிலும் வவுனியா மாவட்டத்தில் 21,382 ஏக்கரிலும் யாழ் மாவட்டத்தில் 10,963 ஏக்கரிலும் பயிரிடப்பட்டு வருவதாகவும் ஆளுநர் தெரிவித்தார்.

பெரும்போகத்தின் போது மன்னார் மாவட்டத்தில் 631 ஏக்கரிலும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 750 ஏக்கரிலும் வவுனியா மாவட்டத்தில் 5,645 ஏக்கரிலும் யாழ்குடாவில் 3,456 ஏக்கரிலும் கிளிநொச்சி மாவட்டத்தில் 110 ஏக்கரிலும் மேட்டு நிலங்களில் பயிற்செய்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.




கிழக்கில் மேலும் மூன்று ரயில் பஸ்
சேவைகளை ஆரம்பிக்க நடவடிக்கை
வாழைச்சேனை உள்ள+ர் ரயில் பஸ் சேவை விரைவில் ஆரம்பிப்பு


கிழக்கு மாகாணத்தில் உள்ள+ர் ரயில் சேவையை மேம்படுத்துவதற்காக மேலும் 03 ரயில் பஸ்களை சேவையில் ஈடுபடுத்த உள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்தது.

ஏற்கனவே மட்டக்களப்பிலும் திருகோணமலையிலும் இரு உள்ள+ர் ரயில் பஸ் சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதோடு விரைவில் வாழைச்சேனை உள்ள+ர் ரயில் சேவைகள் ஆரம்பிக்கப்பட உள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் பி.பி.விஜேசேகர தெரிவித்தார்.

கிழக்கில் ரயில் சேவையை மேம்படுத்துவதற்காக 05 ரயில் பஸ் சேவைகளை ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் கூறினார். வாழைச்சேனை உள்ள+ர் ரயில் பஸ் சேவையில் ஈடுபடுத்துவதற்காக ரயில் பஸ் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும் இரு ரயில் பஸ்கள் கந்தளாய் மற்றும் திருகோணமலை பகுதிகளில் சேவையில் ஈடுபடுத்தப்ட உள்ளன.

போர்நெருக்கடி காரணமாக கிழக்கு பிராந்தியத்தில் போக்குவரத்துச் சேவைகள் பாதிக்கப்பட்டு இருந்ததோடு மக்களின் இயல்பு வாழ்க்கையும் ஸ்தம்பிதமடைந்திருந்தது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமைத்துவத்தின் கீழ், புலிகளின் பிடியில் இருந்து கிழக்கு மாகாணம் முழுமையாக மீட்கப்பட்டதையடுத்து கிழக்கில் இயல்பு வாழ்க்கை முழுமையாக வழமைக்குத் திரும்பியுள்ளது தெரிந்ததே.




வழக்குகள் தொடரப்படாதுள்ள கைதிகள்
விரைவில் விடுவிக்க விசேட ஏற்பாடுகள்
சட்ட மாஅதிபர் தெரிவிப்பு


வழக்குகள் எதுவுமின்றிச் சிறைகளில் நீண்டகாலமாகத் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ்க் கைதிகள் விரைவில் விடுதலை செய்யப்படவுள்ளதாக சட்ட மாஅதிபர் மொகான் பீரிஸ் தெரிவித்தார்.

இதற்காக விசேட நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் கூறினார். வழக்குத் தொடரவேண்டிய அவசியம் இல்லாதவர்கள் நேரடியாக விடுதலை செய்யப்படுவார்கள் என்று தெரிவித்த சட்ட மாஅதிபர், இது தொடர்பில் பதினொரு சட்டத்தரணிகள் ஆராய்ந்து வருவதாகக் கூறினார்.

பெரும்பாலும் அடுத்தமாத முற்பகுதியில் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள் என்று சட்ட மாஅதிபர் நம்பிக்கை தெரிவித்தார்.

அவசரகாலச் சட்டம், பயங்கரவாதத் தடைச்சட்டம் என்பவற்றின் கீழ் கைதுசெய்யப்பட்ட வடக்கு, கிழக்கு, மலையகம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த சுமார் 600 தமிழ்க் கைதிகள் வருடக்கணக்காக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களை விடுதலை செய்வது தொடர்பாக, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பணிப்புரைகளுக்கமைய விசேட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இந்தக் கைதிகளின் விடுதலை தொடர்பாக முக்கிய அறிவிப்பு இந்த வாரம் வெளியாகுமெனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கமைய இவர்களை விடுதலை செய்ய துரித நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக சட்ட மாஅதிபர் கூறினார்.

இது தொடர்பில் கடந்த வாரம் நீதித்துறை அதிகாரிகள் மட்டத்தில் ஆராயப்பட்டதுடன், விடுதலை செய்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டதாக நீதி, சட்ட மறுசீரமைப்பு அமைச்சின் செயலாளர் சுகத கம்லத் தெரிவித்தார்.

வழக்குகள் தொடரப்படாத நிலையில் களுத்துறை, மகசின், வெலிக்கடை, ப+ஸா உள்ளிட்ட சிறைகளில் தமிழ்க் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தம்மை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டங்களை நடத்தியிருந்தனர். அதேநேரம், ஜனாதிபதியிடமும் வேண்டுகோள் விடுத்திருந்தனர். ஜனாதிபதியின் பணிப்பின்பேரிலேயே தமிழ்க் கைதிகளை விடுதலை செய்வதற்குத் தற்போது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இதேவேளை, இறுதி யுத்தத்தின்போது சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 738 பேரை இவ்வாரம் விடுவிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இடம்பெயர்ந்தவர்கள் தங்கியிருந்த முகாம்களில் சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டவர்களுள் 700 பேரும், குற்றப்புலனாய்வுப் பிரிவினால் விசாரணை செய்யப்படுபவர்களுள் 38 பேரும் இவ்வாரம் விடுதலையாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...



முதல் முயற்சி தோற்று விட்டது: அமெரிக்க விமானங்களை தகர்க்க மீண்டும் முயற்சிப்போம்;









நைஜீரிய நாட்டைச் சேர்ந்த இளைஞர் உமர் பாரூக் அப்துல் முதலாப் (வயது23). இவன் லண்டனில் உள்ள ஒரு கல்லூரியில் என்ஜினீயரிங் படித்து வந்தான்.

இவன் கடந்த வெள்ளிக்கிழமை கிறிஸ்துமஸ் தினத்தன்று ஆலந்து நாட்டில் இருந்து அமெரிக்காவுக்கு நார்த்வெஸ்ட் ஏர்லைன்ஸ் விமானத்தில் சென்றான். அந்த விமானம் டெட்ராய்ட் விமான நிலையத்தை நெருங்கிக் கொண்டிருந்தபோது உமர்பாரூக் அப்துல் தான் மறைத்து எடுத்து வந்திருந்த ரகசிய திரவப் பொருட்கள் மற்றும் பவுடரை கலந்து வெடி மருந்தாக்கிஇ அந்த விமானத்தை தகர்க்க சதி செய்தான்.

அவன் வெடிமருந்து கலவையை உருவாக்கிக் கொண்டிருந்தபோதுஇ விபரீதத்தை அறிந்த சக பயணிகள் அவரை மடக்கிப் பிடித்தனர். இதனால் அவனது பயங்கர சதி திட்டம் முறியடிக்கப்பட்டது. 300 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள்.

டெட்ராய்ட் விமான நிலையத்தில் அந்த விமானம் தரை இறங்கியதும்இ உமர் பாரூக் அப்துல் கைது செய்யப்பட்டான். வெடிமருந்து கலவை தயாரித்த போதுஇ அது வெடித்ததால் உமர்பாரூக் அப்துல் காயம் அடைந்திருந்தான். மிக்சிகன் மருத்துவமனையில் அவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

பிறகு உமர் பாரூக் அப்துல் சிறையில் அடைக்கப்பட்டான். அமெரிக்காவில் எந்த நகரில் அவன் சிறை வைக்கப்பட்டுள்ளான் என்ற தகவல் வெளியிடப்படவில்லை. இதற்கிடையே உமர் பாரூக்அப்துலின் குடும்பம் மற்றும் பின்னணி குறித்த எல்லா தகவல்களையும் அமெரிக்க போலீசார் திரட்டி வருகிறார்கள்.

முதல்கட்ட விசாரணையில் உமர்பாரூக் அப்துல் அல்- கொய்தா இயக்கத்துடன் தொர்புடையவன் என்று தெரிய வந்துள்ளது. ஏமன் நாட்டில் உள்ள அல்கொய்தாவின் கிளை ஒன்று உமர்பாரூக்குக்கு நவீன பயிற்சிகளை கொடுத்துள்ளது. பிறகு வெடிமருந்து பவுடரை கொடுத்து அவனை விமானத்தில் தீவிரவாதிகள் அனுப்பி உள்ளனர்.

அப்துல் வைத்திருந்த வெடி மருந்து பவுடரை அரேபிய பகுதி அல்கொய்தா தீவிரவாதிகள் தயாரித்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது இந்த சதி திட்டத்தின் பின்னணியில் உள்ள அனைவரையும் பிடிக்க ஒபாமா உத்தரவிட்டுள்ளார்.

இந்த நிலையில் கிறிஸ்துமஸ் அன்று விமானத்தை தகர்க்க முயற்சி செய்தது நாங்கள்தான் என்று அல்கொய்தாவின் அரேபியன் பிரிவு பொறுப்பு ஏற்றுள்ளது. இது தொடர்பாக அந்த அமைப்பு இஸ்லாமிய இணையத்தளம் ஒன்றில் தகவல் வெளியிட்டுள்ளது.

அதில் கூறப்பட்டி ருப்பதாவது:-

அமெரிக்க விமானத்தை நூதன முறையில் தகர்க்க முயற்சி செய்தது நாங்கள்தான். ஏமன் நாட்டில் எங்கள் குழுக்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத் தியது. அதற்கு பழிக்கு பழி வாங்கவே நாங்கள் இந்த தாக்குதல் முயற்சியில் ஈடுபட்டோம்.

எங்களது முயற்சி எதிர்பாராதவிதமாக தோல்வி அடைந்துவிட்டது. தாக்குதல் தியாக செயலுக்காக நைஜீரியா வாலிபரிடம் அதிநவீன தொழில்நுட்ப கருவியை கொடுத்து அனுப்பி இருந்தோம்.

உயர் தொழில்நுட்பத்தில் தயாரான அந்த கருவி சேர்க்கையில் கடைசி நிமிடத்தில் கோளாறு ஏற்பட்டு விட்டது. இதனால்தான் அது வெடிக்காமல் போய் விட்டது.

அமெரிக்கா நடத்திய குண்டு வீச்சில் எங்கள் அப்பாவி மக்கள் பலர் உயிரிழந்து விட்டனர். அமெரிக்கர்களே உங்களுக்கு ஒன்றை சொல்லிக் கொள்கிறோம். எங்கள் பெண்களையும் குழந்தைகளையும் கொன்று குவித்தவர்களுக்குத்தான் நீங்கள் ஆதரவு கொடுத்துக் கொண்டிருக்கிறீர்கள்.

உங்கள் மீது நாங்கள் எந்த முன் எச்சரிக்கையும் கொடுக்காமல் தாக்குதல் நடத்துவோம். பழிக்கு பழி வாங்குவது நெருங்கி விட்டது. எனவே அமெரிக்கர்களே இனி இது போன்ற தாக்குதல்களை நீங்கள் நிறைய எதிர்பார்க்கலாம்.

உலகில் உள்ள எல்லா முஸ்லிம்களையும் நாங்கள் அழைக்கிறோம். எதிரிகளை கொல்லுங்கள். அரேபியா பகுதிகளை அமெரிக்க படைகள் அதர்மமாக ஆக்கிரமித்து இருப்பதை கண்டித்து நைஜீரியா வாலிபர் தியாகம் செய்துள்ளார்.

அமெரிக்க உளவுத் துறையின் திறமையையும் பலத்த பாதுகாப்பையும் மீறி அவர் வெடி பொருட்களுடன் ஊடுருவி சாதனை படைத்துள்ளார்.

இவ்வாறு அந்த இணையத்தள தகவலில் கூறப்பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...
காணாமற் போனோரை கொண்டுவந்து விடுவதாகக் கூறி பலலட்சம் ரூபாய் மோசடி-
யாழ்ப்பாணக் குடாநாட்டிலிருந்து காணாமற்போனவர்களது உறவினர்களிடமிருந்து 8லட்சம் ரூபாவுக்கும் மேற்பட்ட பண மோசடியொன்று இன்றுகாலை இடம்பெற்றுள்ளது. காணாமற் போனவர்களின் வீடுகளுக்கு தொலைபேசியில் தொடர்புகொண்ட ஒருவர் காணாமற்போனோரை விடுவிக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்து, குறித்த தொகைப் பணத்துடன் யாழ். சிறைச்சாலைக்கு முன்பாக வருமாறும், அவ்விடத்தில் வைத்து காணாமற் போனவர்கள் விடுவிக்கப்படுவர் என்றும் தெரிவித்துள்ளார். இதுபோன்ற தொலைபேசி அழைப்புகள் ஐந்திற்கும் மேற்பட்ட காணாமற் போனவர்களின் உறவினர்களுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது. தொலைபேசியின் பணிப்புரைக்கமைய குறித்த இடத்திற்கு சென்றபோது அவர்களிடமிருந்து பணத்தைச் சேகரித்த ஒருவர் விரைவில் காணாமற்போனவர்களை அவ்விடத்திற்கு கொண்டுவருவதாக தெரிவித்து மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றுள்ளார். குறித்தநபர் சுமார் 8லட்சத்து 75ஆயிரம் ரூபாய் பணத்தை அபகரித்துச் சென்றுள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

28 டிசம்பர், 2009


அமைச்சர் முரளிதரனுடன் இணைந்தே செயற்படுகிறேன்”
மஹிந்த மீண்டும் ஜனாதிபதியாக வேண்டுமென்பதே ஒரே இலக்கு– கிழக்கு முதலமைச்சர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வெற்றிக்காகத் தானும் அமைச்சர் விநயகமூர்த்தி முரளிதரனும் இணைந்து பணியாற்றி வருவதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார். ஜனாதிபதி வெற்றிபெற வேண்டுமென்பதே இருவரதும் ஒரே நோக்கமாகுமெனத் தெரிவித்த முதலமைச்சர், இருவருக்கிடையில் பிணக்குகள் நிலவுவதாக வெளியான செய்திகளில் எந்தவிதமான உண்மையும் இல்லையெனத் தெரிவித்தார். இருவரும் வௌ;வேறு கட்சிகளைச் சார்ந்தவர்களாக இருந்தாலும், ஜனாதிபதித் தேர்தலில், ஒரே நோக்கத்துக்காகப் பாடுபடுவதில் எந்தப் பிரச்சினையும் கிடையாது எனத் தெரிவித்த முதலமைச்சர் சந்திரகாந்தன், கடந்த காலங்களில் சில கருத்து முரண்பாடுகள் நிலவியபோதிலும் தற்போது இணைந்தே செயற்படுவதாகவும் குறிப்பிட்டார். கிழக்கு மாகாணத்தில் மக்களின் ஏகோபித்த ஆதரவை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்குப் பெற்றுக்கொடுப்பதற்காக அர்ப்பணிப்புடன் செயலாற்றி வருவதாகவும் முதலமைச்சர் மேலும் தெரிவித்தார்.


யாழ்தேவி ரயில் சேவை எப்ரல் மாதத்திலிருந்து
ஓமந்தைவரை நீடிக்கும்




யாழ்தேவி ரயில் சேவை எதிர்வரும் ஏப்ரல் முதல் ஓமந்தைவரை நீடிக்கப்படுமென ரயில்வே பொது முகாமையாளர் பி.பி.விஜேசேகர தெரிவித்தார். தாண்டிக்குளத்தில் இருந்து ஓமந்தை வரையான 10 கிலோமீட்டர் நீளமான ரயில் பாதைகள் மீளமைக்கும் பணிகள் துரிதமாக முன்னெடுக்கப்படுவதோடு ஓமந்தை ரயில் நிலையத்தை நிர்மாணிக்கும் பணிகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

சுமார் 2 தசாப்தங்களின் பின்னர் யாழ்தேவி ரயில் சேவை ஓமந்தைவரை பயணிக்க உள்ளதாகவும் பொது முகாமையாளர் பி.பி.விஜேசேகர கூறினார்.

400 மில்லியன் ரூபா செலவில் ரயில் பாதைகள் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வருகிறது. ஓமந்தை ரயில் நிலையத்தை மீளமைக்கும் பணிகளை பிரதியமைச்சர் லயனல் பிரேமசிறி பொறுப்பேற்று முன்னெடுத்து வருகிறார்.

மோதல் காரணமாக கொழும்பில் இருந்து வவுனியாவரையே ரயில் சேவைகள் இடம்பெற்றன. புலிகளின் பிடியில் இருந்து வட பகுதி முழுமையாக மீட்கப்பட்டதையடுத்து வவுனியாவில் இருந்து தாண்டிக்குளம்வரை ரயில் சேவைகள் ஆரம்பிக்கப்பட்டன.

30 வருடகாலம் நீடித்த மோதல்களின்போது வவுனியாவுக்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான ரயில் பாதைகள், ரயில் நிலையங்கள் என்பன புலிகளினால் நாசமாக்கப்பட்டதாகவும் ரயில் தண்டவாளங்கள் பங்கர் அமைப்பதற்காக புலிகளினால் எடுத்துச் செல்லப்பட்டதாகவும் பொது முகாமையாளர் தெரிவித்தார்.

யாழ்தேவி ரயில் சேவையை யாழ்ப்பாணம்வரை மீண்டும் ஆரம்பிக்க துரித நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி பணித்துள்ளதோடு இதற்கான ஏற்பாடுகளை ரயில்வே திணைக்களம் துரிதமாக முன்னெடுத்து வருகிறது.



சந்தேகத்தின்பேரில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களுள் 738 தமிழ்க் கைதிகள் இந்த வாரம் விடுவிப்பு சட்ட மாஅதிபர் தெரிவிப்பு




இறுதி யுத்தத்தின் பின்னர் விசாரணைக்கென அழைத்துச் செல்லப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களுள் 738 பேர் இவ்வார இறுதிக்குள் விடுதலை செய்யப்படுவார்களென சட்ட மாஅதிபர் மொகான் பீரிஸ் தெரிவித்தார்.

நிவாரணக் கிராமங்களில் இருந்தபோது விசாரணைக்கென கொண்டுசெல்லப்பட்டவர்களுள் 700 பேரும், குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்களுள் 38 பேரும் இவ்வாறு விடுவிக்கப்படுவதாக சட்ட மாஅதிபர் கூறினார். சீஐடி யினரால் தடுத்து வைத்து விசாரணை செய்யப்பட்டுள்ளவர்களுள் 55 பேர் புனர்வாழ்வு முகாமுக்கு அனுப்பப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

விடுவிக்கப்பட்டவர்கள் எவ்விதமான குற்றச்செயல்களிலும் சம்பந்தப்படாதவர்கள் என்பது நிரூபணமாகியிருப்பதாகவும், ஏற்கனவே 100 பேர் இவ்;வாறு விடுவிக்கப்பட்டிருப்பதாகவும் சட்ட மாஅதிபர் கூறினார். தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்படுபவர்களைத் துரிதமாக விடுவிப்பதோடு, ஒரு மாதத்தில் குறைந்தது 100 பேரையாவது விடுவிக்க எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

புலிகள் இயக்க உறுப்பினர்கன் என அடையாளம் காணப்பட்ட சுமார் 11,500 பேர் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு வருகின்றனர். இவர்கள் தவிரவும் இறுதி யுத்தத்தின்போது இடம்பெயர்ந்து நிவாரணக் கிராமங்களுக்கு வந்து சேர்ந்தவர்களுள், பலர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். அவர்களுள் சந்தேகத்திற்கிடமானவர்கள் தொடர்ந்தும் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், 700 பேர் இவ்வாரம் விடுதலையாகின்றனர். இவர்களை மீளக்குடியமர்த்த அனுப்பிவைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



கிழக்கில் 80 ஆயிரம் குடும்பங்கள் வெள்ளத்தால் பாதிப்பு
பாரபட்சமின்றி நிவாரணம் வழங்க
முதலமைச்சர் சந்திரகாந்தன் பணிப்புரை




கிழக்கு மாகாணத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சகல மக்களுக்கும் எந்தவிதமான பாரபட்சமுமின்றி நிவாரண உதவிகளைத் துரிதமாகப் பெற்றுக்கொடுக்குமாறு கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.

அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களில் தொடர்ந்தும் மழைபெய்து வருவதால் வெள்ளப்பாதிப்புகளுக்குள்ளாகியுள்ள பல்லாயிக்கணக்கானோருக்கு உடனடியாக நிவாரணங்களைப் பெற்றுக்கொடுப்பதுடன், அவர்களின் வாழ்வாதாரத்தைச் சீர்படுத்த நடவடிக்கை எடுக்குமாறும் முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால், இதுவரை சுமார் 80 ஆயிரம் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. சுமார் 500 குடும்பங்கள் இருப்பிடங்களை இழந்து இடம்பெயர்ந்துள்ளன. இவர்களுக்குத் தேவையான சமைத்த உணவு, உலருணவு, நிதியுதவி போன்றவற்றை எதுவிதமான பாரபட்சமுமின்றிப் பெற்றுக்கொடுக்க வேண்டுமென அதிகாரிகளைப் பணித்துள்ளதாக முதலமைசச்ர் சந்திரகாந்தன் தெரிவித்தார்.

பட்டிப்பளை, வவுணதீவு பிரதேசங்களில் கூடுதலானோர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், வாகரையில் 500 குடும்பங்கள் இடம்பெயர நேரிட்டதாக மட்டக்களப்பு அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார். நிர்க்கதி நிலைக்குள்ளானவர்களுக்கு சமைத்த உணவு வழங்கப்பட்டு வருகின்றது. வீடுகள் பாதிக்கப்பட்டவர்களுக்கு உலருணவு வழங்கப்படுவதுடன் வீடுகளை முற்றாக இழந்தவர்களுக்கு நிதியுதவியும் வழங்கப்படுவதாக அரச அதிபர் தெரிவித்தார்.

மேலும், உலக உணவுத்திட்டத்தின் உதவியுடன் தாழ்ந்த பிரதேசங்களில் வடிகான்களைச் சீராக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அவர் கூறினார்.

அம்பாறை மாவட்டத்தில் கடந்த 10 ஆந் திகதியிலிருந்து வெள்ளப் பாதிப்பு இடைக்கிடை ஏற்பட்டு வருவதாக மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்தார். இந்த மாவட்டத்தில் சுமார் 35 வீடுகள் நீரில் மூழ்கியதாகவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணங்களை உடனுக்குடன் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அரச அதிபர் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...


புலிகளின் கப்பலுடன் கடற்படைக்குச் சொந்தமான ‘சயுர’ என்ற கரையோர ரோந்து கப்பலும் பொதுமக்களின் பார்வைக்காக காலி துறைமுகத்தில் வைக்கப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் கப்டன் அதுல செனரத் தெரிவித்தார்.

காலியில் நடைபெறும் சீசன் - 2009 கண்காட்சியிலேயே இந்தக் கப்பல் காட்சிக்கு வைக்கப்படவுள்ளது. அத்துடன் கொழும்பிலுள்ள பொதுமக்கள் இந்தக் கப்பலை காண்பதற்காக கொழும்பு காலி முகத்திடலில் கப்பல் நேற்றுக் காலை தொடக்கம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.


புதியபாதை சுந்தரம்
-



’புதியபாதை’ பத்திரிகை தானாக முளைக்கவில்லைபதியம்வைத்து நீரூற்றிப் பாதுகாத்து வளர்த்தவர்வட்டுக் கோட்டைத் தேர்தல் தொகுதியினில்சுட்டும் செழிப்பான சுழிபுரக் கிராமத்தில்...சதாசிவம் ஆசிரியரின் சாந்தமான மகனாய்...உதாரணம் காட்டும் முன்மாதிரி மாணவனாய்....விக்ரோறியா’ கல்லூரிப் படிப்பின் பின்னர்தக்கதான வழிசொன்ன சிவசண்முக மூர்த்தியிவன்.ஆயிரத்துத் தொழாயிரத்து அறுபத்து ஒன்பதிலேஆயிரக் கணக்கில் அரசாங்க ஊழியர்கள்பாதிக்கப் பட்டார்கள் சிங்கள மொழியறிவுசோதனையில் தேறினால் தான்வேலை நிரந்தரமென்று....அரசாங்கக் கட்டளைக்குக் கட்டுப் பட்டபலர்அரசாங்கக் கடமையில் ஓய்வுபெற்ற டாக்டர்திருக்குறளைச் சிங்களத்தில் மொழிபெயர்த்த ஆசான்திருவாளர் தம்பையா இல்லத்திலே நடாத்தும்சிங்களமொழி வகுப்பில் நானும்போய்ச் சேர்ந்திட்டேன்.அங்குவந்த மாணவருள் சண்முகமும் தம்பியானார்.சகலரையும் மதிக்கும் சந்ததியார் தன்னுடனேகுகபூசணிஇ பவானிஇ குருக்கள்பிறை சூடிக்குருஅப்படிப் பலபேர் அவ்விடத்தில் படித்தார்கள்.அக்கா”வென அழைத்து எனக்குற்ற துணையானார்கள்.புத்தரின் போதனைகள் ஏற்கெனவே திருக்குறளில்பத்திரமாக இருப்பதைப் பயன்படுத்தி வாழுங்கள்”என்றெமக்குக் குருவானவர் எடுத்தியம்பிக் கூறியவைநிற்கிறதே மானிட நெஞ்சத்தில் பசுமையாக.அந்தாண்டு


‘மே’தின ஊர்வலத்தைத் தடைசெய்தகுண்டாந் தடியடிகள் கோரமாகத் தாக்கியதால்என்துணைவர் உட்பட எண்ணரிய தோழர்கள்துன்புறுத்தப் பட்டுக்கண் துடைப்பாக வைத்தியசாலையில் சேர்த்துப் பாதுகாப்புக் கொடுத்தனரே!வேலையை வைத்தியர்கள் விசுவாசமாய்ச் செய்தார்கள்.உறவுகளின் துணையற்று உருக்குலைந்த எந்தனுக்குமறவாத தோழர்கள்போல் என்வகுப்புச் சோதரரும்தாமாகமுன் வந்தென் மதலைகட்கு உதவினரே!ஆமாம்! சண்முகனின் அன்பினை என்னென்பேன்!வருடங்கள் பத்துக் கழிந்து ஓடியபின்.....பெருமைபெறு ‘சுந்தரம்’ என்துணைவர் மணியத்தாரமதிக்கின்ற பொதுவுடமைத் தத்துவத்தின் பூரணத்தால்புதியபாதை’ பத்திரிகை-- புத்தாக்கச் சிந்தனையில்அடிமைப் பட்டதமிழ் மக்கள் விழிக்கவேண்டிமுடிவான உறுதியுடன் அச்சகத் தொடர்புகொண்டார்.சித்திரம் வரைவதிலே சிறந்த சுந்தரத்தார்அத்தனை திறமைகளும் ”தாய்மாமன் இராசரத்தினதின் வாரிசு” என்று மகிழ்ந்திட்டார்.தன்னடக்கத் தலைவனாய் இருந்ததெல்லாம்பறைசாற்ற விரும்பவில்லை விளம்பரமும் தேடவில்லை.குறைகூறல் விரும்பாது செயல்வீரனாய் வாழ்ந்திருந்தான்.


எண்பத்து ஈராமாண்டு ஜனவரி இரண்டாம்நாள்கண்மறைவாய் உன்கருத்தை வெல்ல முடியாதோர் சுட்டானராம்”என்றசெய்தி வந்தபின்தான் அறிந்தோமே உன் திறமையெல்லம்....கன்றிழந்த பசுப்போலப் பசுந்தரம் அம்மா புலம்பியதும்தோழொடிந்த தோழர்கள் அவசரத்தில் பழிவாங்கத்துடித்ததுவும்வாலொடிந்த பல்லிக்கு மீண்டும் முளைப்பதுபோல் உன்
எண்ணத்தை நிறைவேற்ற மக்கள்யுத்தம்வேண்டி கழகத்தின் பின்னாலேவண்ணத்துப் பூச்சிகள்போல் வாலிபர்கள் பறந்ததுவும் கண்கூடு.

வள்ளியம்மை சுப்பிரமணியம்



மேலும் இங்கே தொடர்க...



தமிழர் பகுதிகளில் பிரசாரம்: பொன்சேகா திட்டம்


கொழும்புஇ டிச.27: இலங்கை அதிபர் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி (யு.என்.பி.) உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் ஆதரவில் போட்டியிடும் ஓய்வுபெற்ற ராணுவத் தலைமை தளபதி சரத் பொன்சேகாஇ தமிழர்களுடைய பகுதிகளில் தீவிர சுற்றுப்பயணம் செய்தும் பொதுக்கூட்டங்களில் பேசியும் அவர்களுடைய ஆதரவைப் பெற முடிவு செய்திருக்கிறார். இதற்காக ஜனவரி 2 முதல் அவர் தனது பிரசாரப் பயணத்தைத் தொடங்குகிறார்.

இலங்கையின் வெவ்வேறு பகுதிகளில் வசிக்கும் தமிழர்களின் எண்ணிக்கை லட்சக்கணக்கில் இருக்கிறது.

வடக்கிலும் கிழக்கிலும் போர் ஓய்ந்த பிறகு முழு அளவில் சகஜ நிலைமை திரும்பவில்லை.

பொதுத் தேர்தலில் எந்தக் கட்சி வேட்பாளர் வெற்றி பெற்றாலும் தங்களுடைய நலன்களைக்காக்க முன்வரமாட்டார்கள் என்ற அவநம்பிக்கை தமிழர்களிடம் வேரூன்றியிருக்கிறது.

ராணுவத்துடனான போருக்குப் பிறகு தமிழர்கள் தங்க இலங்கை அரசு ஏற்பாடு செய்துள்ள அகதிகள் முகாம்களில் ஏராளமானோர் இன்னமும் தங்கியிருக்கின்றனர்.

இவர்களில் சுமார் 15இ000 பேர் மட்டும் வாக்காளர் பதிவு விண்ணப்பங்களை வாங்கி முறைப்படி நிரப்பித்தந்துள்ளனர். மற்றவர்கள் ஆர்வம் காட்டவில்லை.

தன்னை எதிர்த்துப் போட்டியிடும் அதிபர் மகிந்த ராஜபட்சவுக்கு பணபலம்இ அதிகார பலம் இருப்பதால் தமிழர்களின் ஆதரவைத் தான் பெறுவதுதான் வெற்றியை உறுதி செய்யும் என்று பொன்சேகா கருதுகிறார்.

தமிழர்களின் நல்லெண்ணத்தைப் பெறும் முயற்சியாக ஜனவரி 2-ம் தேதி யாழ்ப்பாணத்தில் உள்ள நல்லூர் கோவிலில் வழிபாடு நடத்திய பிறகே தேர்தல் பிரசாரப் பணிகளைத் தொடங்குகிறார்.

பிறகு யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஆசிரியர்கள்இ மாணவர்கள் ஆகியோருடன் விவாதம் நடத்துகிறார்.

தமிழர்களின் கோரிக்கைகள் குறித்து அவர்களிடமே கேட்டறிவார். தமிழர்களை தேசிய நீரோட்டத்தில் சேர்க்க தான் வைத்திருக்கும் திட்டங்களை அப்போது அவர் விளக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பொன்சேகா பேசும் பொதுக்கூட்டங்களில் ஐக்கிய தேசியக் கட்சி உள்ளிட்ட இலங்கை அரசியல் கட்சித் தலைவர்களும் தமிழர் கட்சித் தலைவர்களும் பேசுவார்கள் என்று தெரிகிறது.

அடுத்த ஞாயிற்றுக்கிழமை மன்னார்இ வவுனியா நகரம் ஆகிய இடங்களில் பொன்சேகா பேசுகிறார்.

ஜனவரி 4-ம் தேதி கிளிநொச்சிஇ முல்லைத் தீவு ஆகிய ஊர்களிலும் ஜனவரி 5-ம் தேதி மட்டக்களப்புஇ அம்பாறை ஆகிய ஊர்களிலும்இ ஜனவரி 6-ம் தேதி முத்தூர்இ திரிகோணமலை ஆகிய ஊர்களிலும் பொதுக்கூட்டங்களில் பேசுகிறார்.

இலங்கைத் தமிழர்களின் நிலைமைதான் பரிதாபமானது. ஒரு புறம் அவர்களைக் கொல்ல படைகளை ஏவிய அதிபர் மகிந்த ராஜபட்ச மீண்டும் வேட்பாளராகக் களத்தில் நிற்கிறார். எதிர்த்து நிற்பவரோ அவருடைய கட்டளையைச் சிரமேற்கொண்டு விடுதலைப் புலிகளை நிர்மூலமாக்கியவர்.

தமிழர்கள் ஆதரிக்க வலுவானஇ தமிழ் வேட்பாளர் எவரும் இல்லை. இந்தத் தேர்தலுக்குப் பிறகு தமிழர்களின் கோரிக்கை ஏற்கப்படும்இ அவர்கள் சம உரிமையுள்ள இலங்கைக் குடிமக்களாக நடத்தப்படுவார்கள் என்ற உத்தரவாதமும் இல்லை
மேலும் இங்கே தொடர்க...

27 டிசம்பர், 2009

பயங்கரவாதம் ஒழிக்கப்பட்ட இலங்கையை உலகின் அதி சிறந்த நாடாக மாற்றுவேன்
மினுவாங்கொடையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ





பயங்கரவாதம் ஒழிக்கப்பட்ட இலங் கையை உலகின் அதிசிறந்த நாடாக்குவதே தமது ஒரே நோக்கம் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று (27) மினுவாங்கொடை நகர சபை கூட்டத்தில் கூடியிருந்த ஒரு இலட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் கூட்டத்தினரிடையே உரையாற்றிய போது கூறினார்.
தொடர்ந்தும் பேசிய அவர் மேலும் கூறியதாவது:

தெளிவான மற்றும் உறுதியான நோக்கத்தை கொண்டுள்ள தம்மீது சேறு பூசும் பிரசாரங்களை செய்ய எந்த நியாயமும் இல்லை.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமது வெற்றியை உறுதிப்படுத்தும் நோக்கில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்கொண்டுவரும் பிரசாரக் கூட்டத்தொடரில் இது இரண்டாவது கூட்டமாகும்.

ஜனாதிபதி தேர்தலை அரசியல் சேறு பூசும் நடவடிக்கையாகவே எதிர்க்கட்சியினர் மாற்றியுள்ளனர். அவர்கள் அரசியல் தரிசனம்இ கொள்கைஇ பொருளாதார அல்லது அபிவிருத்தி நோக்கு ஆகிய வற்றைப் பற்றி ஒரு வார்த்தையேனும் பேசுவதில்லை.

மஹிந்த சிந்தனையில் 95 சதவீதத்தை நிறைவேற்றியுள்ள தான் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிக்கவில்லை என்பதைப்பற்றி மட்டுமே பேசுகின்றனர்.

ஆனால் மஹிந்த சிந்தனையை நிறைவேற்ற மக்கள் ஆணை வழங்கிய ஆறு வருடங்களில் இன்னும் இரண்டு வருடங்கள் மிகுதியாக உள்ளதை அவர்கள் மறந்துவிடக்கூடாது என்பதை ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்கு ஜனாதிபதிக்கு அதிகாரம் இல்லை. அதற்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக்கொள்ள மக்கள் முன் செல்ல வேண்டும் என்று ஜனாதிபதி மேலும் கூறினார்.

இதனை செய்வதற்கு எதிர்க்கட்சியினர் தனக்கு எந்த ஒத்துழைப்பும் வழங்கவில்லை. எனினும் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மட்டுமன்றி பாராளுமன்றத்திலும் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை மக்கள் தமக்கு பெற்றுத்தருவார்கள் என்று நம்புவதாகவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டார்.

நாற்பது வருட கால அரசியல் அனுபவம் உள்ள நாம் நாற்பது நாட்கள் அனுபவத்தை மட்டுமே பெற்றுள்ள அறியாக் குழந்தையுடன் போட்டியிட வேண்டியுள்ளது. எனினும் அரசியல் அனுபவத்தின் இடைவெளிக்கு சமமான அதிகப்படி வாக்குகளால் தான் வெற்றி பெறப்போவதாகவும் கூறினார்.

எதிர்க்கட்சியினரின் அரசியல் நோக்கம் ராஜபக்ஷ குடும்பத்தினர் மீதான பழி வாங்கும் நோக்கமே யாகும்.

ஆனால் பொய்க்கு ஆயுள்குறைவுஇ இன்று இங்கு கூடியிருக்கும் இல ட்சக்கணக்கான மக்கள் பொய்க்கும் சேறு பூசுவதற்கும் குறைந்த ஆயுளே உள்ளது என்பதை நிரூபித்துக்காட் டப் போகிறார்கள் என்று குறிப்பிட் டார்.

இக் கூட்டத்தில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினரும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவன்ச பேசும்போதுஇ

ஊழலையும் விரயத்தையும் ஒழிக்கப்போவதாக கூறும் பொன்சேகா யுத்தம் முடிவுற்றபோது பாதுகாப்பு அமைச்சுக்குத் தெரியாமலே ஆயுதங்களை கொண்டு வருவதற்கு முயற்சித்ததாக கூறினார்.

அந்த ஆயுதக் கப்பலை கொண்டுவந்தவர் சரத் பொன்சேகா. ஆனால் அதனை கோதாபய ராஜபக்ஷவின் பேரில் போடுவதற்கு மக்கள் விடுதலை முன்னணியும் ஐக்கிய தேசிய கட்சியும் சேநு பூசும் பிரசாரங்களை மேற்கொள்வதாக அவர் மேலும் கூறினார்.

அமைச்சர்கள் மைத்திரிபால சிரிசேனஇ தினேஷ் குணவர்தனஇ பாட்டலி சம்பிக்க ரணவகஇ மேர்வின் சில்வா ஆகியோரும் இங்கு உரையாற்றினர்.



புலிகளுடன் உடன்படிக்கை செய்து முஸ்லிம்களை ஏமாற்றியவர் ஹக்கீம்
முஸ்லிம்கள் அவரை ஆதரிக்கக் கூடாது - பசில்


அனைத்து அரசாங்கங்களிலும் அமைச்சராக விருந்து பிரபாகரனு டன் உண்டு குடித்து உறவாடி சமாதானப் பேச்சுவார்த்தையிலும் ஈடுபட்ட ரவூப் ஹக்கீமிற்கு வட க்கு முஸ்லிம்களை மீள்குடியேற்ற முடியாமற் போனதென ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ எம்.பி. தெரிவித்தார்.

புத்தளம் ஆலங்குடாவில் நேற்று நடைபெற்ற அ. இ.மு.கா. கட்சியின் மாநாட்டில் சிறப்பதிதி யாகக் கலந்துகொண்டு உரையாற் றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தமதுரையில் மேலும் தெரிவிக்கையில்;

புலிகளுடன் புரிந்துணர்வு உடன்படிக்கையை மேற்கொண்டு முஸ்லிம் மக்களை ஏமாற்றிய மு. கா. தலைவருக்கு ஒருபோதும் முஸ்லிம்கள் ஆதரவளிக்க கூடாது. உங்கள் எதிர்காலத்தை சபீட்சமயமாக்க நடவடிக்கை களை மேற் கொள்ளும் ஜனாதிபதிக்கு உங்கள் பூரண ஆதரவினை வழங்குங்கள்
மேலும் இங்கே தொடர்க...



இராணுவ ஆட்சியை நிறுவ முயலும் பொன்சேகா முஸ்லிம்களை அடிமைகளாகவே நடாத்துவார்





அ. இ. மு. கா வன்னி மாவட்ட மாநாட்டில் ரிஷாட்

நான்கு வருட நல்லாட்சி மூலம் முஸ்லிம்களின் எதிர்பார்ப்பினை உணர்ந்து செயற்பட்டவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே.

அவரை மீண்டும் ஜனாதியாக்க முஸ்லிம் சமூகம் பூரண ஆதரவினை வழங்குவது உறுதியென அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

தமது சுய நலத்துக்காக தேர்தலுக்காக முஸ்லிம்களை வழிநடத்த முயலும் ரவூப் ஹக்கீம் தொடர்ந்து அமைச்சராக இருந்தும் முஸ்லிம் சமூகத்துக்காக ஒரு பாடசாலையையோ அல்லது ஒரு மலசல கூடத்தைத் தானும் அமைத்துக் கொடுத்த தில்லையெனவும் அமைச்சர் தெரிவித்தார்.

இராணுவ ஆட்சியொன்றை அமைத்து நாட்டைக் குட்டிசுவராக்க முயலும் சரத் பொன்சேகா முஸ்லிம்களை அடிமைச் சூழலிலேயே வழிநடத்துவார். அதற்கு எவரும் துணைபோகக் கூடாதெனவும் அமைச்சர் தெரிவித்தார்.

அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் வட மாகாணத்திற்கான வருடாந்த மாநாடு புத்தளம் ஆலங்குடாவில் அமைச்சர் ரிசாத் பதியுதீன் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மேலும் தெரிவிக்கையில்இ ரவூப் ஹக்கீம்இ மனோ கணேசன்இ மங்கள சமரவீர போன்றோர் தற்போது பொன்சேகாவிடம் சோரம் போயுள்ளனர்.

தமது பதவிக்காலத்தை மேலும் நீடிப்பதற்காகப் போராடிய சரத் பொன்சேகா ஆறு மாதத்தில் நிறைவேற்று ஜனாதிபதிப் பதவியை விட்டுக்கொடுப்பதென்று கூறுவது எத்தகைய பொய். அவருக்குப் போய் ரவூப் ஹக்கீம் ஆதரவு வழங்குவது விந்தையிலும் விந்தை


அமெரிக்க பிரஜா உரிமை பெற்றுள்ள பொன்சேகா எவ்வாறு இலங்கை ஜனாதிபதியாக வர முடியும்?












அமெரிக்க
பிரஜா உரிமை பெற்றுள்ள சரத் பொன்சேகா எவ்வாறு இலங்கை ஜனாதிபதியாக வர முடியும் என்று ஐக்கிய தேசிய மாற்று முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சரத் கோங்கஹகே நேற்று கேள்வி எழுப்பினார்.

நான் இரட்டை பிரஜா உரிமை கொண்டவரல்ல என்று சரத் பொன்சேகா இதுவரை மறுக்கவில்லை. எனவே இதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

இதற்கான ஆலோசனைகள் மேற் கொள்ளப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

ஜனாதிபதி வேட்பாளரான சரத் கோங்கஹகே ஏற்பாடு செய்திருந்த முதலாவது ஊடகவியலாளர் மாநாடு நேற்றுக் காலை இலங்கை மன்றக் கல்லூரியில் இடம்பெற்றது. அவர் இங்கு மேலும் உரையாற்றுகையில்:-

கடந்த 30 வருட காலமாக மிகவும் பரபரப்புடனும்இ சூடுபிடித்தும் காணப்பட்ட எமது நாட்டில் தற்பொழுது தான் அமைதியான சூழல் காணப்படுகின்றது.

மிகவும் கஷ்டத்திற்கு மத்தியில் உருவாக்கப்பட்ட இந்தச் சூழலை மீண்டும் குழப்புவதற்கு பலர் முயற்சிக் கின்றனர்.

சரத் பொன்சேகாவை ஜனாதிபதியாக்கி இந்த நாட்டில் இராணுவ நிர்வாகத்தை ஏற்படுத்த பலர் முயற்சிக்கின்றனர். இதனை அனுமதிக்க முடியாது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்த நாட்டிற்காக பாரிய சேவையாற்றியவர். நான் வெற்றி பெற முடியாது. எனினும் முன்றாவது இடத்திற்கு வர முடியும்.

ஐக்கிய தேசிய கட்சியோ அதன் சின்னமோ இம்முறை வாக்குச் சீட்டில் இல்லை. ஐ. தே. க. மக்கள் மனதிலிருந்து விடுபட்டுள்ளது. குரல் கொடுக்க இல் லாதவர்களுக்கு குரல் கொடுப்பதற்காகவே இன்று நான் களத்தில் குதித்துள்ளேன். இந்த மக்களை எனக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன்.

தற்பொழுது படை வீரர்கள் முன்னெடுத்த நடவடிக்கைகளை கொச்சைப்படுத்தவும்இ சர்வதேச நீதிமன்றில் நிறுத்தவும் பலர் முயற்சிக்கின்றனர்.

சரத் பொன்சேகா சன்டே லீடர் பத் திரிகையில் ஒரு விடயத்தை கூறிவிட்டு அதற்கு அடுத்த வார பத்திரிகைகளில் வேறு விடயத்தை கூறுகிறார்.

வெளிநாடுகளின் பின்னணியிலேயே இவர் செயற்படுகின்றார். தனது தனிப்பட்ட குரோதத்தை வெளிக்காண்பிப்பதற்காக பல்வேறு பொய்யான தகவல்களை சரத் பொன்சேகா வெளியிட்டு வருகின்றமை மிகவும் கவலைக்குரிய விடயமாகும்.

தற்பொழுது வைராக்கியமான அரசியல் நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது. இதனை நடுநிலைப்படுத்துவதற்காக சகல மதத் தலைவர்களும் முன்வர வேண்டும் என நான் கேட்டுக் கொள்கின்றேன்.

ஆயுதங்கள் கொள்வனவு செய்யவில்லை என்று இடத்திலும்இ அவ்வாறு வந்த ஆயுதத்தை நானே திருப்பி அனுப்பினேன் என்றும் பாதுகாப்புச் செயலாளர் தலையிட்டு அதனை திருப்பி அனுப்பினார் என்றும் இன்னுமொரு இடத்திலும் சரத் பொன்சேகா கூறியுள்ளார்.

ஆனால் பாதுகாப்பு படைகளின் பிரதம அதிதியாக இருந்தவாறே அவரே கையொப்பமிட்ட கடிதம் எம்மிடம் உள்ளது. எனவே சரத் பொன்சேகா முன்னுக்கு பின் முரணாக கூறுவது தெளிவாக விளங்குகின்றது என்றார்.

சரத் பொன்சேகா தோல்வி பெறுவது உறுதி. எனவே தான் அமெரிக்க பிரஜா உரிமையை இதுவரை ரத்துச் செய்யாமல் வைத்துள்ளார். ஏனெனில் தோல்விய டைந்தவுடன் மீண்டும் அமெரிக்கா செய் வதே அவரது நோக்கமாகும் என்றும் குறிப்பிட்டார்



தமிழ்த் தேசியக்; கூட்டமைப்பு எம்.பி சிவாஜிலிங்கம் இன்று நாடு திரும்பினார்-


இந்தியாவிற்குள் நுழைவதற்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் திருச்சி விமான நிலையத்திலிருந்து திருப்பியனுப்பப்பட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் இன்றுகாலையில் நாடு திரும்பியுள்ளார். கடந்த ஒருவாரகாலம் லண்டனில் தங்கியிருந்த அவர் டுபாய் ஊடாக இந்தியாவிற்கான பயணத்தை நேற்று மேற்கொண்டிருந்த போதிலும் இந்தியாவிற்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டு இந்திய குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகளினால் நேற்று டுபாய்க்கே திருப்பி அனுப்பப்பட்டிருந்தார். டுபாயிலிருந்து இன்றுகாலை அவர் கொழும்பை வந்தடைந்துள்ளார். தஞ்சாவூரில் நேற்றுமுதல் இடம்பெறுகின்ற ஈழத்தமிழர் வாழ்வுரிமை மாநாட்டில் பங்கேற்கவே அவர் நேற்று திருச்சி சென்றிருந்ததாக கூறப்பட்டுள்ளது.

மெனிக்பாம் முகாம் விரைவில் மூடப்படும் -

-மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க- யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ள மெனிக்பாம் முகாம் விரைவில் மூடப்படும் என மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஜனவரி 31ம் திகதிக்கு முன் முகாமில் தங்கியுள்ள சகல மக்களையும் தமது சொந்த இடங்களில் மீள்குடியேற்றிவிட முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட 180நாள் காலக் கெடுவிற்குள் மக்களை மீள்குடியேற்றுவதற்கு தீவிர முயற்சி எடுக்கப்பட்டு வருவதாவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். இடம்பெயர் முகாம்களில் தற்போது 80ஆயிரம் மக்கள் மட்டுமே தங்கியிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். நிலக்கண்ணிவெடி அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், வாக்குறுதி அளிக்கப்பட்ட காலத்திற்குள் மக்களை மீள்குடியேற்ற முடியும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். சுதந்திர இடம்நகர்விற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ள போதிலும் மக்கள் குறுகிய காலத்திற்குள் முகாம்களுக்கு திரும்புவதன் மூலம் முகாம்களின் நிலைமை சிறந்த வகையில் காணப்படுகின்றமை உறுதிப்படுத்தப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொடருந்து பருவச் சீட்டுக்களைப் பயன்படுத்தி பேருந்துகளில் செல்வதற்கு ஏற்பாடு-

தொடருந்து பருவச் சீட்டுக்களைப் பயன்படுத்தி பேருந்துகளில் செல்வதற்கான வசதியினை ஏற்படுத்துவதற்கு ரயில்வே திணைக்களம் திட்டமிட்டுள்ளது. உத்தேசத் திட்டம் அடுத்த வருடத்திலிருந்து அமுல்படுத்தப்படவுள்ளதாக தொடருந்துச் சேவைகள் வணிக அத்தியட்சகர் விஜே சமரசிங்க தெரிவித்துள்ளார். தொடருந்துகளில் செல்லும் பயணிகள் சில வேளைகளில் தமது பயண முடிவுவரை தொடருந்திலேயே செல்லமுடியாத நிலை ஏற்படும்போது இந்த திட்டத்தின்மூலம் அவர்கள் பேருந்துகளில் பயணிக்க முடியுமென அவர் தெரிவித்துள்ளார். தொடருந்து தடம்புரண்டாலோ அல்லது விபத்துகள் இடம்பெற்றாலோ பயணிகள் தமது தொடருந்து பருவச் சீட்டைக் கொண்டு இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகளில் செல்வதற்கு ஏதுவாக இத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று பேருந்து ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு போன்ற சந்தர்ப்பங்களில் பேருந்து பருவச்சீட்டுக்களைப் பயன்படுத்தி தொடருந்துகளில் பயணிப்பதற்கான திட்டமொன்றும் எதிர்காலத்தில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது என்றும் விஜே சமரசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

இந்தோனேசியா மெராக் துறைமுகத்தில் உள்ள இலங்கையர்களில் ஒருவர் கடத்தல்-

இந்தோனேசியாவின் மெராக் துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை அகதிகளில் ஒருவர் குடிவரவு அதிகாரிகளால் கடத்திச்செல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. வைத்தியசாலையொன்றில் வைத்து நேற்று குறித்தநபர் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக இந்தோனேசியத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 30வயதுடைய ஜீ.சரவணன் என்ற இளைஞனே கடத்தப்பட்டுள்ளார். குறித்த கப்பலில் தங்கியிருந்த அகதியொருவர் கடந்த 23ம்திகதி கடுமையான சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு துணையாக வைத்தியசாலையில் இருந்தவரே கடத்தப்பட்டுள்ளார். மேலும் நேற்று வைத்தியசாலையில் இந்தோனேசிய குடிவரவு குடியகல்வு அதிகாரிகள் உள்ளிட்ட சிலர் சோதனைகளை நடத்தியதாக கூறப்படுகிறது. கடத்திச் செல்லப்பட்டவரை நேற்றிரவு 8மணியளவில் கப்பலுக்கு அழைத்துவர நடவடிக்கை எடுப்பதாக தெரிவிக்கப்பட்டபோதிலும் இதுவரை கப்பலுக்கு அவர் அழைத்துவரப்படவில்லை என்று கூறப்படுகிறது.

சுனாமியின்போது மாத்தறை சிறையில் இருந்து காணா நிலையில் வேறு பெயரில் இருந்தவர் கைது

- 2004ம் ஆண்டு சுனாமி அனர்த்தத்தின்போது மாத்தறை சிறைச்சாலையிலிருந்து காணாமற் போனதாக சந்தேகிக்கப்படும் கைதியொருவரை தற்போது பொலீசார் கைதுசெய்துள்ளனர். குருநாகல் மற்றும் கொழும்பு ஆகிய பகுதிகளில் ஆங்கிலம் மற்றும் யோகா ஆகியவற்றைப் பயிற்றுவித்து வந்த நிலையிலேயே அவர் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளார். போலியான பெயர்கொண்டு போலியான அடையாள அட்டையுடன் கைதுசெய்யப்பட்டுள்ள நபர் வாகனக் கொள்ளையொன்றில் குற்றவாளியாகக் கருதப்பட்டு மாத்தறை சிறைச்சாலையில் தண்டனை அனுபவித்து வந்துள்ளார். 2004ம் ஆண்டு டிசம்பர் 26ம் திகதி ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தின்போது மாத்தறை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதிகள் சிலரும் உயிரிழந்திருந்தனர். இவ்வாறு உயிரிழந்தவர்களின் பட்டியலில் கைதுசெய்யப்பட்டுள்ள நபரின் பெயரும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக பொலீஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஸ்ட பொலீஸ் அத்தியட்சகர் ஐ.எம்.கருணாரத்ன தெரிவித்துள்ளார்.



மேலும் இங்கே தொடர்க...
அமெரிக்காவில் அல் காய்தா பயங்கரவாதி கைது: வெடிமருந்து மூலம் நடுவானில் விமானத்தை தகர்க்க சதி




வெடி பொருள் கொண்டு தகர்க்க முயன்ற அமெரிக்க விமானம். டெட்ராய்ட் விமான நிலையத்தில் தரையிறங்கிய பின்னர் அதை சோதனையிட செல்லும் போலீஸôர்.
வாஷிங்டன், டிச. 26: அமெரிக்க விமானத்தை வெடிபொருள் வைத்து நடுவானில் தகர்க்க முயன்ற அல் காய்தா பயங்கரவாதியை பயணிகள் மடக்கிப் பிடித்தனர்.

இந்த விமானம் சனிக்கிழமை நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டம் நகரிலிருந்து 278 பயணிகளுடன் அமெரிக்காவில் உள்ள டெட்ராய்ட் நகருக்கு சென்று கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்தது.

கிறிஸ்துமஸ் தினத்தில் அமெரிக்க மக்களுக்கு துயரத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த சதி தீட்டப்பட்டிருக்கலாம் என்றும் ஆனால் அதிர்ஷ்டவசமாக பயங்கரவாதி மடக்கிப் பிடிக்கப்பட்டான் என்றும் போலீஸôர் தெரிவித்தனர்.

பிடிபட்ட அல் காய்தா பயங்கரவாதி உமர் பாரூக் அப்துல் முதாலாப் நைஜீரியாவைச் சேர்ந்தவர். லண்டனில் பொறியியல் படிப்பு படித்து வருகிறார்.

நார்த்வெஸ்ட் ஏர்லைன்ஸ் விமானம் வெள்ளிக்கிழமை இரவு ஆமஸ்டர்டம் நகரிலிருந்து அமெரிக்காவில் உள்ள டெட்ராய்ட் நகருக்குப் புறப்பட்டது. விமானம் டெட்ராய்ட் நகரில் தரையிறங்குவதற்கு 25 நிமிடங்களுக்கு முன்னர், ஒரு இருக்கையில் இருந்து பட்டாசு வெடித்தது போன்ற சத்தத்துடன் புகை வந்தது. அருகில் இருந்த பயணிகள் பீதி அடைந்து விமான பணியாளர்களுக்கு தகவல் கொடுத்தனர். அந்த இருக்கையில் இருந்த இளைஞர், தான் வைத்திருந்த வெடி மருந்துக்கு நெருப்புவைக்க முயன்றது தெரியவந்தது. அருகில் இருந்த பயணிகளும் விமானப் பயணியாளர்களும் அவரை மடக்கிப் பிடித்து நெருப்பை அணைத்தனர்.

வெடி மருந்தை வெடிக்க வைப்பதற்காக அவன் வைத்திருந்த கருவி குறிப்பிட்ட நேரத்தில் சரியாக வேலை செய்யாததால் பெரும் நாசம் தவிர்க்கப்பட்டது. இருப்பினும் நெருப்பு காரணமாக அந்த பயங்கரவாத இளைஞனும் அருகில் இருந்த 2 பயணிகளுக்கும் சிறிது காயம் ஏற்பட்டது.

விமான ஓட்டி அந்த நபரைப் பிடித்து விமானத்தின் முன்பகுதிக்கு கொண்டு சென்றார். பின்னர் விமானம் டெட்ராய்ட் நகரில் தரையிறங்கிய உடன் தனியாக நிறுத்தப்பட்டது. விமானத்தை போலீஸôர் சுற்றி வளைத்தனர். பின்னர் வெடிகுண்டு ஏதாவது உள்ளதா என்று சோதனை செய்தனர். அந்த பயங்கரவாத இளைஞன் கைது செய்யப்பட்டான்.÷

அவன் வைத்திருந்த வெடிமருந்து திரவமாகவும் திடப் பொருளும் கலந்ததாக இருந்தது. அதை வெடிக்க வைக்கும் முயற்சி தோல்வியடைந்ததால் பலர் உயிர் தப்பினர் என்று அமெரிக்க புலனாய்வு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அந்த இளைஞன் தனது காலில் வெடி மருந்தை மறைத்து வைத்திருந்தான். ஒரு ஊசி மூலம் அதை ரசாயனத்துடன் கலந்து வெடிக்க வைக்க முயன்றுள்ளான்.

பிடிபட்ட பயங்கரவாதிக்கு ஏற்பட்ட தீ காயம் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அமெரிக்க புலனாய்வு அதிகாரிகள் மருத்துவமனையிலேயே விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த விமானம் நைஜீரியாவிலிருந்து ஆம்ஸ்டர்டம் நகரில் தரையிறங்கி பின்னர் அங்கிருந்து அமெரிக்கா புறப்பட்டதாக தெரிகிறது.

அல் காய்தா பயங்கரவாதி அமர்ந்திருந்த இருக்கைக்கு 3 வரிசைக்கு முன்பு அமர்ந்திருந்த சையத் ஜாப்ரி இதுகுறித்து கூறும்போது, பட்டாசு வெடிப்பது போன்று சத்தம் வந்தது. நெருப்பு புகை வந்து திரும்பியபோது அவனை பலர் மடக்கி பிடித்துக் கொண்டிருந்தனர் என்றார்.

இதற்கிடையே பிடிபட்ட பயங்கரவாதி லண்டனில் பொறியியல் படிப்பு படித்து வருவதாக தெரிய வந்துள்ளதால் லண்டன் போலீஸôர் அது குறித்து விசாரணையை தொடங்கி உள்ளனர்.

கடந்த 2001-ம் ஆண்டு செப்டம்பர் 11-ம் தேதி அமெரிக்காவில் சர்வதேச வர்த்தக மையம் மீது விமானத்தை மோதி அல் காய்தா தீவிரவாதிகள் தாக்குல் நடத்தினர். இதில் ஏராளமானோர் கொல்லப்பட்டனர். இந்த பயங்கர

தாக்குதலுக்குப் பின் அந்த நாட்டில் பாதுகாப்பு பல மடங்கு பலப்படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்கா செல்லும் எல்லா விமானங்களிலும் பலத்த சோதனை மேற்கொள்ளப்படுகிறது. இருப்பினும் நைஜீரியா இளைஞர் வெடி மருந்து எடுத்துச் சென்றதை கண்டுபிடிக்க முடியவில்லை
மேலும் இங்கே தொடர்க...
சேதமடைந்த வட பகுதி வைத்தியசாலைகள்
சகல வசதிகளுடனும் மீளத் திறப்பு










புலிகள் இயக்கத்தினால் சேதமாக்கப்பட்ட கிளிநொச்சி பிரதான ஆஸ்பத்திரி அடங்கலான கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் உள்ள பல பிரதான ஆஸ்பத்திரிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. இவற்றுக்குத் தேவையான மருத்துவர்கள் அடங்கலான ஆளணி மற்றும் வசதிகள் வழங்கப்பட்டுள்ளதாக வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் சந்ரசிறி தெரிவித்தார்.

100 படுக்கையறை வசதிகளுடன் கிளிநொச்சி வைத்தியசாலை ஆரம்பிக்கப்பட்டுள்ளதோடு எக்ஸ்ரே வசதி, இரத்த வங்கி வசதி என்பன வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

முழங்காவில் ஆதார வைத்தியசாலையும் மீண்டும் இயங்கத் தொடங்கியுள்ளதோடு இங்கு 03 மருத்துவர்கள் உட்பட பணியாளர்கள் சேவையாற்றி வருகின்றனர்.

முல்லைத்தவு வைத்தியசாலையும் மீண்டும் இயங்கத் துவங்கியுள்ளதோடு வைத்தியசாலைக்குத் தேவையான மருத்துவ அதிகாரிகள் மற்றும் பணியாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். 04 அம்பிய+லன்ஸ் வண்டிகளும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

மீள்குடியேற்றப் பணிகளுடன் இணைந்ததாக சேதமாக்கப்பட்ட வைத்தியசாவைகள் துரிதமாகப் புனரமைக்கப்பட்டு மக்கள் நலனுக்காக திறக்கப்பட்டு வருகின்றது. மோதல்கள் இடம்பெற்றபோது புலிகள் பல வைத்தியசாலைகளை தமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்திருந்தது தெரிந்ததே.


நீண்டகால குடிநீர்ப் பிரச்சினைக்குத் தீர்வு

மலையகத்தின் நீண்டகால பிரச்சினையாக உள்ள குடிநீர் திட்டம் இதுவரை சீராக நடைபெறாமல் இருந்தது. இதற்குத் தீர்வாக 2003 ஆம் ஆண்டு முன்னைநாள் வீடமைப்பு, நிர்மாணத்தறை அமைச்சராக இருந்த சௌயமியமூர்த்தி தொண்டமான அவர்களால் அப்போது 03 குடிநீர் அபிவிருத்தித் திட்டங்கள் முன்வைக்கப்பட்டன.

மஹிந்த சிந்தனையின் மூலம் மேற்குறிப்பிட்ட 03 அபிவிருத்தித் திட்டங்கள் இப்பொழுது அமுலாக்கப்படுகின்றது. குறிப்பாக மலையகத்திலுள்ள கினிகத்தேனை, ஹட்டன், மற்றும் மஸ்கெலியா ஆகிய நகரம் மற்றும் சுற்றுப் பிரதேச மக்கள் குடிநீருக்கு மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியிருந்தனர்.

அம்பகமுவ பிரதேச சபைக்குட்பட்ட பிரதேசங்களினூடாக ஹட்டன் நகர சபையும் சேர்ந்து இன்று நீர்ப்பாசனத்துறை அமைச்சர் அத்தாவுல்லா அவர்களால் மேற்குறிப்பிட்ட 03 அபிவிருத்தி திட்டங்கள் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. இவ்வைபவத்தில் இளைஞர் வலுவ+ட்டல் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான், பிரதியமைச்சர்களான முத்து சிவலிங்கம், ஜெகதீசன் மற்றும் ஹட்டன்-டிக்கோயா நகர சபைத் தலைவர் நந்தகுமார், பிரதேச சபையின் செயலாளர் நகுலேஸ்வரன் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் கலந்து சிறப்பித்தார்கள். ஹட்டன் நகரம் மற்றும் சுற்றுவட்டாரத்திற்கு குடிநீர் வழங்காததையடுத்து நீர் விநியோகம் செய்யவும், கினிகத்தேனை நகரம் மற்றும் சுற்றுப்புற மக்கள் நலன்கருதி லொனொக்கில் இருந்து நீரை விநியோகம் செய்யவும் மஸ்கெலியாவிற்கு புரொன்ஸ்விக் இலிருந்து நீரை விநியோகம் செய்யவும் அபிவிருத்தித் திட்டமாக அமைகின்றது.

நீண்ட நாட்களாக மலையத்தில் நிலவிவந்த குடிநீர்ப் பிரச்சினை இந்த மஹிந்த சிந்தனை அபிவிருத்தித் திட்டம் மூலம் தீர்வு அடைய சாத்தியமாயிற்று
மேலும் இங்கே தொடர்க...