3 மே, 2011

ஓமந்தை இராணுவத் தடுப்பு முகாம் பாடசாலையாக மாற்றம்





ஓமந்தை மகா வித்தியாலயத்தில் இயங்கி வந்த இராணுவ தடுப்பு முகாம் மூடப்பட்டு பாடசாலையை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சுமார் இரண்டு வருடகாலமாக ஓமந்தை மகா வித்தியாலயம் இராணுவத் தடுப்பு முகாமாக இயங்கி வந்தது.

அதில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சகலரும் நல்வழிப்படுத்தப்பட்டு விட்டதாகவும் அவர்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாடசாலைக் கட்டிடம் உரிய நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டு வகுப்புக்கள் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக